திருட வந்த வீட்டில் பணம் வைத்துவிட்டு சென்ற கும்பல் - விநோத சம்பவம் நடந்தது எங்கே? Twitter
இந்தியா

திருட வந்த வீட்டில் பணம் வைத்துவிட்டு சென்ற கும்பல் - விநோத சம்பவம் நடந்தது எங்கே?

Antony Ajay R

ஒரு வீட்டில் திருடச் சென்ற திருடர்கள் எடுத்துச் செல்ல எதுவும் இல்லாததால், திருடர்கள் 500 ரூபாயை விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

டெல்லி, ரோகினியில் உள்ள செக்டார் 8ல் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது.

எம்.ராமகிருஷ்ணா என்பவர், ஜூலை 19ம் தேதி தனது மனைவியுடன் குருகிராமில் உள்ள மகளைக் காண சென்றிருக்கிறார்.

ஜூலை 20,21 தேதிகளில் திருடர்கள் வந்திருக்கலாம் எனக் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.

80 வயதான ராமகிருஷ்ணா என்பவர் ஒரு முன்னாள் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

21ம் தேதி காலை ராமகிருஷ்ணாவின் பக்கத்துவீட்டுக்காரார் திருடர்கள் குறித்து போனில் தெரிவித்துள்ளார்.

உடனடியாக வீட்டுக்கு திரும்பியவர் மெயின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார். ஆனால் உள்ளே சென்ற அவரால் திருடர்கள் எதை எடுத்துச் சென்றார்கள் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை.

காவல்துறையினர் கூறியிருப்பதன் படி, அவரது வீட்டில் எதுவும் திருடுபோகவில்லை. ஆனால், அவரது முன் வாசலில் 500 ரூபாய் தாள் வைக்கப்பட்டிருந்திருக்கிறது.

ராமகிருஷ்ணன் தனது வீட்டில் எந்த மதிப்பு வாய்ந்த பொருளையும் வைத்திருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இந்த புகாரை பதிவு செய்துள்ள காவல்துறையினர் திருடர்களைத் தேடி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?