350 ஆண்டுகள் பழமையான 400 முகலாயர் கால நாணயங்கள் கண்டுபிடிப்பு - எங்கே? Twitter
இந்தியா

350 ஆண்டுகள் பழமையான 400 முகலாயர் கால நாணயங்கள் கண்டுபிடிப்பு - எங்கே?

ஒவ்வொரு நாணயத்தின் எடையும் 11 கிராமுக்கு மேல் இருக்கும். ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பு சுமார் 3,500 ரூபாய் என்று கூறப்படுகிறது.

Priyadharshini R

உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் உள்ள ஒரு கோவிலில் கட்டுமானப் பணியின் போது முகலாயர் காலத்தைச் சேர்ந்த சுமார் 400 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஹுசைன்பூர் கிராமத்தில் உள்ள சதி தாம் கோவிலில் எல்லைச் சுவர் அமைப்பதற்காக மண் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த சில தொழிலாளர்கள் பழங்கால நாணயங்களை கண்டெடுத்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாணயங்களை கைப்பற்றி தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயின் மேலும் கூறுகையில், ”நாணயங்களில் அரபு மொழியில் கல்வெட்டுகள் இருந்தன. அவை முகலாயர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.

தொல்லியல் துறை நாணயங்களை ஆய்வு செய்து, அவை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உலோகத்தை உறுதி செய்யப்படும்” என்றும் அவர் கூறினார்.

கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்களில் பெரும்பாலானவை சுமார் 350 ஆண்டுகள் பழமையானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் ஒவ்வொரு நாணயத்தின் எடையும் 11 கிராமுக்கு மேல் இருக்கும். ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பு சுமார் 3,500 ரூபாய் என்று கூறப்படுகிறது.

இதேபோன்ற சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் நடந்தது. மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் ஒரு கட்டுமானப் பணியின் போது முகலாயர் கால சதுர வடிவ நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்ததாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?