வந்தே பாரத்: 3வது முறையாக பாதியில் நின்ற ரயில் - இது தான் காரணமா? Twitter
இந்தியா

வந்தே பாரத்: 3வது முறையாக பாதியில் நின்ற ரயில் - இது தான் காரணமா?

Antony Ajay R

இந்தியாவிலேயே அதி வேகமான ரயில் என்று கருதப்படும் வந்தே பாரத் ரயிலின் சேவை தொடர்ந்து மூன்றாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சில நாட்களிலேயே மும்பையிலிருந்து காந்திநகர் சென்ற போது எருமை மாடுகள் முட்டியதில் முன் பகுதி சேதமடைந்தது.

இந்த சேதம் உடனடியாக சரிசெய்யப்பட்டு மீண்டும் தண்டவாளத்துக்கு வந்தது வந்தே பாரத். எருமை மாடுகளை தண்டவாளத்தில் விட்ட உரிமையாளர் மீது ரயில்வே வழக்கு பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியாது, இவற்றை கவனத்தில் கொண்டுதான் ரயில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ரயில் முனைப்பகுதியை முற்றிலும் மாற்றிக்கொள்ள முடியும்" என்று கூறினார் ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

அடுத்த முறை வெற்றிகரமாக காந்திநகர் சென்று அங்கிருந்து மீண்டும் மும்பை திரும்பும் போது தண்டவாளத்திலிருந்த பசுமாடு மோதி மீண்டும் முன்பகுதி சேதமடைந்தது.

வியாழக்கிழமை எருமை மாடுகள் மோதியதில் சீர் செய்யப்பட்ட அதே பகுதி தான் வெள்ளிக்கிழமை பசு மாட்டால் மீண்டும் சேதமடைந்தது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக சனிக்கிழமையான இன்று டெல்லியிலிருந்து வாரணாசி வரை இயக்கப்படுவதில் சிக்கல்களை சந்தித்துள்ளது வந்தே பாரத்.

இந்த முறை ரயில் சக்கரம் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பயணிகள் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றப்பட்டனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?