வி.எஸ்.பதானியா Twitter
இந்தியா

ALH Mark 3 : அரபிக் கடல் போர் கப்பலில் தரை இறக்கப்பட்ட ஹெலிகாப்டர் - இதன் சிறப்புகள் என்ன?

Antony Ajay R

கடலோரக் காவல்படைத் தலைவர் வி.எஸ்.பதானியா ALH Mark 3 என்ற புதிய ஹெலிகாப்டரை அரபிக் கடலிலிருந்த போர்க் கப்பல் மீது தரையிறக்கி அசத்தினார்.

இந்த ALH mark 3 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டவை. இதன் வேகம் மற்றும் எந்த சூழலையும் தாங்கும் வலிமை காரணமாக கடலோரக்காவல்படையயில் இதன் பயன்பாடு அதிகமாக இருக்கும்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இது சிறந்தது எனக் கூறப்படுகிறது. இது இரட்டை எஞ்சின் கொண்ட புதிய தலைமுறை ஹெலிகாப்டர். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட Hindustan Aeronautics Limited என்ற நிறுவனம் இதனை உருவாக்கியது.

ALH Mark 3 ஹெலிகாப்டர்

57 வயதாகும் வி.எஸ்.பதானியா ALH Mark 3 குறித்து, “இது நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் ஆகும். இதன் வேகமும் வலிமையை எங்களது திறனை அதிகரித்திருக்கின்றன. இனி எங்களால் அதிக பணிகளைத் திறம்பட மேற்கொள்ள முடியும். எங்கள் எல்லை விரிவடைந்திருக்கிறது” எனப் பேசினார்.

AlH mark 3 ஹெலிகாப்டரின் இரண்டாவது படையைக் கடந்த மே 4ம் தேதி வி.எஸ்.பதானியா துவக்கிவைத்தார். இது நாட்டின் கட்லலோர பாதுகாப்பை உறுதி செய்ய உதவிபுரியும் என அவர் கூறினார்.

ALH Mark 3 ஹெலிகாப்டர்

கடலில் ரோந்து பணிகளை மேற்கொள்ள இந்த ஹெலிகாப்டரில் மிசின் துப்பாக்கி பொருத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ தேவைகள் ஏற்பட்டால் அவசரக் காலங்களில் உபயோகப்படுத்தக்கூரிய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான அமைப்பும் உள்ளது.

ஹெலிகாப்டரின் கட்டுப்பாட்டு மையமான காக்பிட் முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்டிருக்கிறது. தேடுதல் பணிகளுக்குப் பயன்படுத்த அதிக சக்திவாய்ந்த விளக்கு இருக்கிறது. பறக்கும் போது விபத்துகளைத் தவிர்க்கப் போக்குவரத்து எச்சரிக்கை மற்றும் மோதல் தவிர்ப்பு அமைப்ப இருக்கிறது. இதனால் இந்த ஹெலிகாப்டர் பாதுகாப்பானதும் கூட.

தரையிலிருந்தும் மற்ற ஹெலிகாப்டர்களிடமிருந்தும் தகவல்களை பெறுவதற்காக மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான homer என்ற அமைப்பு,தானியங்கி விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியன உள்ளன.

நவீன கண்காணிப்பு ரேடார் பொருத்தப்பட்டிருப்பாதல் நீண்ட தூரம் சென்று கடலை ஆராய முடியும். நீண்ட தொலைவில் சிக்கிக்கொள்பவர்களை மீட்க இது உதவும். எல்லையைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் இது உதவும்.

இத்தகைய மேம்பட்ட அமைப்புகளுடனும் புதிய தொழில்நுட்பங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர் வருங்காலத்தில் மீட்புப் பணிகளிலும் தேடுதல் பணிகளிலும் அதிகமாக ஈடுபடுத்தப்படும் என எதிர்ப்பாக்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?