security in India Twitter
இந்தியா

மோடி முதல் ஸ்டாலின் வரை: Z, Y, X பாதுகாப்பு - எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது?

Priyadharshini R

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் பாதுகாப்பு முறை Z+, Z, Y, மற்றும் X என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த படைக்காக ஆண்டுதோறும் ரூ. 300 கோடிவரை பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.

மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பு முறை மற்றும் வகைகள் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பு செயல்முறை

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஆகிய இரு படைகள் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன.

பிரதமர் பதவியில் இருப்போர்களுக்கும் முன்னாள் பிரதமர்களுக்கும் சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்பிஜி) வழங்கப்படும்.

இது தவிர இந்த பாதுகாப்பு, அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் உளவுத்துறை அமைப்புகளின் அறிக்கைகள் பெயரில் தனிநபர்களுக்கும் இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

மற்ற பாதுகாப்பு வகைகள் அரசால் முடிவு செய்யப்படும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

மத்திய பாதுகாப்பு வகைகள்

ஆறு வகையான மத்திய பாதுகாப்பு பிரிவுகள் உள்ளன. எக்ஸ், ஒய், ஒய் பிளஸ், இசட், இசட் பிளஸ் மற்றும் எஸ்பிஜி.

எக்ஸ் பிரிவு

இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு விஐபிக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். ஆறு போலீஸ் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேர் வீதம் மூன்று ஷிப்ட்டிற்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.

ஒய் பிரிவு

இரண்டு போலீஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு ஆயுதமேந்திய போலீஸ் வீட்டில் 24 மணிநேரமும், இரவில் கூடுதல் பாதுகாப்பும் அளிப்பார்கள். சுமார் 11 அதிகாரிகள் வீட்டிற்கும், விஐபி செல்லுமிடங்களுக்கும் சேர்த்து பாதுகாப்பு அளிப்பார்கள். இதில் ஐந்து பேர் வீட்டிலும், ஆறு பேர் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் ஷிப்டுகளில் பணியாற்றுவார்கள்.

இசட் வகை

2 முதல் 8 ஆயுதமேந்திய காவலர்கள் வீட்டிலும், இரண்டு பேர் 24 மணிநேரமும், அனைத்து சாலைப் பயணங்களுக்கு 1 முதல் 3 பேர் வரையிலான ஆயுதமேந்திய காவலர்கள் உட்பட சுமார் 22 பேர் பாதுகாப்பு அளிக்கின்றனர்.

இசட் பிளஸ் வகை

இந்த பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு குண்டு துளைக்காத கார், மூன்று ஷிப்டுகளில் தேவைப்படும் பாதுகாவலர்கள் பாதுகாப்பிற்கு வருவார்கள். இவற்றிற்கு இவ்வளவுதான் என்று வரையறை கிடையாது. நிறைய காவலர்கள் தேவைக்கேற்ப வருவார்கள்.

பொதுவாக இசட் பிளஸ் பிரிவு மற்றும் இசட் பிரிவு பாதுகாப்பு, உயிருக்கு நேரடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?