பிரபல ஸ்ட்ரீட் ஃபுட் ஆன ”பானிபூரி” இந்தியாவிற்கு எப்போது வந்தது? அடடே தகவல் Twitter
இந்தியா

பிரபல ஸ்ட்ரீட் ஃபுட் ஆன ”பானிபூரி” இந்தியாவிற்கு எப்போது வந்தது? அடடே தகவல்

உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டும் இல்லாமல் சில நகரங்களில் சாக்லேட், ஐஸ் கிரீம் வைத்து கூட பூரிகள் சுவைக்கபடுகிறது. இந்த பாணிபுரிக்கு ஒரு சுவாரசிய வரலாற்று கதை இருக்கிறது.

Priyadharshini R

பானி பூரி என்றவுடன் கண்டிப்பாக இன்று சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வந்துவிடும். வட இந்தியாவில் பிரபலமான ஸ்நாக்ஸாக இருந்த பானி புரி இன்று தென்னிந்தியாவையும் வசப்படுத்திவிட்டது.

இந்த பூரியின் நடு பகுதியில் ஒரு துளையை போட்டு அதனுள் வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பட்டாணி என வைத்து கொடுக்க, அதனை ரசத்தில் முக்கி எடுத்து வாயில் அப்படியே சுவைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தினமும் இதனை சாப்பிடுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். அடிக்கடி இந்த பானி பூரியை சுவைத்தாலும் அது எப்படி உருவானது என்று யாரும் யோசித்திருக்கமாட்டோம். இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் இருக்கும் தெருவோர கடைகளில் அதிக மக்களால் வாங்கி சுவைக்கப்படும் உணவு என்றால் அது பானி பூரி தான். பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் ஆஃபிஸ் செல்பவர்கள் வரை மாலை வேளையில் அவர்களின் பசியை போக்கி கொள்ள இதனை சாப்பிடுகிறார்கள்.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இதன் பெயர் மாறுபடும். பானிபூரிக்கு ஹிந்தியில் 'கோல்கப்பா' என்று பெயர். ஹரியானாவில் இது 'பானி பட்டாஷி’, மத்திய பிரதேசத்தில் 'ஃபுல்கி',

உத்தரபிரதேசத்தில் 'பனி கே படாஷே' அல்லது 'படகே', அசாமில் 'புஸ்கா' பீகார் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் 'கப்-சப்', நேபாளம், ஜார்கண்ட், வங்காளம் மற்றும் சத்தீஸ்கரில் 'புச்கா' என்று அழைக்கபடுகிறது.

உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டும் இல்லாமல் சில நகரங்களில் சாக்லேட் , ஐஸ் கிரீம் வைத்து கூட பூரிகள் சுவைக்கபடுகிறது. இந்த பானி பூரிக்கு ஒரு சுவாரசிய வரலாற்று கதை இருக்கிறது.

பானிபூரிக்கு முன்னோடியாக நம்பப்படும் 'ஃபுல்கி' முதலில் மகதத்தில் தோன்றியதாக நம்பப்படுகிறது. அதை கண்டுபிடித்தவர் குறித்த குறிப்புகள் கிடைக்கவில்லை.

பானிபூரியின் இரண்டு முக்கிய பொருட்கள் உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய். இரண்டும் 300-400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்தன.

100-125 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சுற்றி பானிபூரி தோன்றியதாக பிரபல உணவு வரலாற்றாசிரியர் புஷ்பேஷ் பந்த் கருதுகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?