”கங்கையில் பதக்கங்களை எறியவில்லை” மல்யுத்த வீரர்களை தடுத்த விவசாயிகள் - என்ன நடந்தது? Twitter
இந்தியா

”கங்கையில் பதக்கங்களை எறியவில்லை” மல்யுத்த வீரர்களை தடுத்த விவசாயிகள் - என்ன நடந்தது?

Priyadharshini R

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருக்கிறார். இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்களை முன்னிட்டு இவரைக் கைது செய்யக்கோரி கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் ஜந்தல் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை ஒட்டி நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயன்றனர்.

அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, அவர்கள் மீது 147, 149, 186, 188, 332, 353 ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டது. வினேஷ் போகட், சாக்‌ஷி மாலிக் மற்றும் சங்கீதா போகட் ஆகியோர் இரவில் விடுவிக்கப்பட்டனர்.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்த இடத்திலிருந்து மல்யுத்த வீரர்களின் உடைமைகளை காவல்துறையினர் அகற்றியிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவர் என காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இனி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் வாழ்வதில் அர்த்தம் இருக்காது

இதற்கிடையில் சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசியெறியப் போவதாக தெரிவித்திருந்தனர்.

“கங்கையில் பதக்கங்களை எறிந்த பின்னால் நாங்கள் வாழ்வதில் அர்த்தம் இருக்காது. நாங்கள் டெல்லி இந்தியா கேட்டில் காலவரையறையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வோம்” என மல்யுத்த வீரர் விக்னேஷ் போகத் கூறியுள்ளார்.

பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம்

நாட்டுக்காக விளையாடி வென்ற பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் முன்பே கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில், மல்யுத்த வீரர்களை அவர் நேரில் சந்தித்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை கைவிடுமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் அவர் பேசினார்.

அவர்களிடம் இருந்து பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட நரேஷ் திகாயத், தங்களுக்கு 5 நாட்கள் அவகாசம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து பதக்கங்கள் கங்கையில் ஏறியாமல் தடுக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா போன்ற சில வீரர்கள் ட்விட்டர் வழியாக குரல் கொடுத்து வருகின்றனர்.

வீராங்கனைகளை தடுக்கப் போவதில்லை

கங்கையில் பதக்கங்களை வீசுவதாக அறிவித்துள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுக்கப் போவதில்லை என்று ஹரித்வார் சிறப்பு எஸ்.பி. அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் மல்யுத்த வீரர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான என்.சி அஸ்தான் தன் ட்விட்டர் பக்கத்தில், ``தேவைப்பட்டால் நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவோம். என்று பதிவிட்டிருந்தார். பல சர்ச்சைகளுக்குப் பிறகு இந்தப் பதிவு நீக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, ”ஐபிஎஸ் அதிகாரி எங்களை சுடுவது பற்றி பேசுகிறார். சகோதரரே நான் எதிரில் தான் நிற்கிறேன். தோட்டாக்களை மார்பில் ஏந்துவதற்கு எங்கு வரவேண்டும் எனச் சொல்லுங்கள். நான் என் முதுகைக் காட்ட மாட்டேன், என் மார்பில் குண்டுகளை ஏந்துவேன். அதை மட்டும்தான் செய்யவில்லை. உங்களுக்கு எங்களை சுடவேண்டும் என்றால், அதையும் செய்துவிடுங்கள்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?