Jadeja Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL -ல் இருந்து விலகும் ஜடேஜா - காரணம் என்ன?

Antony Ajay R


சென்னை அணியின் முக்கிய ஆல்ரவுண்ரான ஜடேஜா IPL 2022ல் மீதமிருக்கும் போட்டிகளிலிருந்து விலகுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் ரவீந்திர ஜடேஜா. கடந்த சீசன்களில் சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும் கேப்டன்சி இவருக்கு அவ்வளவாகக் கைவரவில்லை. இதனால் இரு போட்டிகளுக்கு முன்பு கேப்டன்சியிலிருந்து வெளியேறியிருந்தார் ஜடேஜா.

ஜடேஜா கேப்டன்சியிலிருந்து வெளியேறும் போது, “ஒரு நல்ல ப்ளேயரை இழக்க விரும்பாததால் ஜடேஜவை இந்த பதவியிலிருந்து விலகுகிறார்” எனப் பேட்டிக் கொடுத்திருந்தார் கேப்டன் தோனி.

கடைசியாக ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த போட்டியிலும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. சிகிச்சை எடுத்துவந்த ஜடேஜா தற்போது இந்த சீசனிலிருந்து முழுவதுமாக வெளியேறுவதாகக் கூறப்படுகிறது.

இந்த சீனனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது சென்னை அணி. அடுத்த போட்டியில் நாளை மும்பை அணியுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?