IPL: 14 சீசன்களில் 12 முறை பிளே ஆஃப் சென்ற CSK; 5வது கோப்பையை கைப்பற்றுமா தோனி படை? twitter
ஸ்போர்ட்ஸ்

IPL: 14 சீசன்களில் 12 முறை பிளே ஆஃப் சென்ற CSK; 5வது கோப்பையை கைப்பற்றுமா தோனி படை?

Keerthanaa R

நேற்று டெல்லி கேபிட்டல்ஸுடன் வெற்றிப்பெற்றதன் மூலம் ஐபிஎல் இந்த பருவத்தின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணிக்கு தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் மற்றும் டிவான் கான்வே மிக வலுவான தொடக்கத்தை கொடுத்தனர்.

முதல் விக்கெட்டை டெல்லி அணி எடுக்கும்போது சென்னையின் ஸ்கோர் 141. பின்னர் களமிறங்கிய சிவம் தூபே வழக்கம்போல சிக்சர் மழை பொழிய அணியின் ஸ்கோர் அதிகரித்த வண்ணம் இருந்தது.

சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்தது போல, அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்து தோனியும் களமிறங்கினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 223 ரன்கள் எடுத்திருந்தது.

224 என்ற இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா கைக்கொடுக்கவில்லை. ஒரு பக்கம் கேபன் வார்னர் நின்று போராட, மறுபக்கம் விக்கெட்கள் சரிந்தன. 20 ஓவர்கள் முடிவில், வார்னர் 86 ரன் எடுத்திருக்க டெல்லி அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் அணியின் நெட் ரன்ரேட்டும் உயர, இரண்டாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது தோனியின் படை.

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 14 பருவங்களில், 12 முறை பிளே ஆஃபுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, ஐபிஎல் முடிந்து வெளியேறியபோது, "we will come back stronger" என எம் எஸ் தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

போட்டி முடிந்து பேசிய தோனி, "தனிப்பட்ட ரெக்கார்ட்களுக்காக அல்லாமல், அணியின் நலனை மனதில் வைத்து விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுப்பது அவசியம். அதுவே நாக் அவுட் போட்டிகளில் அணிக்கு வலுசேர்க்கும்.

எங்கள் அணியின் நிர்வாகம் இதுவரை எங்களுக்கு உரிய ஆதரவை அளித்துள்ளது. அணியின் வீரர்களும் தான். வீரர்கள் இல்லாமல் அணியில்லை.

துஷார் தேஷ்பாண்டே டெத் ஓவர் பௌலிங்கில் முன்னேறியுள்ளார். கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்துவீச தன்னம்பிக்கை அவசியம், அது தற்போது அணி பௌலர்களுக்கு அதிகரித்துள்ளது" என்றார் தோனி.

மே 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் தகுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போடியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிடும். தோல்விபெறும் அணி, எலிமினேட்டரில் வெற்றி பெரும் அணியை எதிர்கொள்ளும். இதனால், இறுதிச் சுற்றுக்கு முன்னேற மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.

பிளே ஆஃபுக்கு தகுதி பெறும் மற்ற இரண்டு அணிகள் எது என இதுவரை முடிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?