IPL 2023: போராடி தோற்ற சென்னை, ராஜஸ்தான் - கடைசி பந்து வரை சென்ற சண்டே போட்டிகள்! ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

IPL 2023: போராடி தோற்ற சென்னை, ராஜஸ்தான் - கடைசி பந்து வரை சென்ற Sunday போட்டிகள்!

Keerthanaa R

நேற்று நடந்த ஐபிஎல்லின் 999வது மற்றும் 1000வது போட்டி மிகவும் ஸ்பெஷலாக அமைந்தன.

இரண்டு போட்டிகள் நான்கு இன்னிங்க்ஸிலும், அணிகளின் ஸ்கோர் 200ஐ தொட்டது.

சென்னை அணி தோற்றாலும், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தல தோனியின் அதிரடி இருந்தது. கடைசி பந்து வரை யார் பக்க வெற்றி என கணிக்க முடியாத வண்ணம் திரில்லிங்காக சென்ற போட்டிகள்

வீக்கெண்ட் என்றாலே, இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்கும். நேற்று மதியம் நடந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று சென்னை பேட்டிங் தேர்வு செய்தது. வலுவான தொடக்கத்தை தந்தனர் ருதுராஜ்- கான்வே ஜோடி.

தொடக்கம் முதல் கடைசி பந்து வரை விளையாடிய டிவான் கான்வே 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வழக்கம் போலவே ஜடேஜா களமிறங்கிய போது, தோனி தோனி என கோஷமிட்டது சேப்பாக்கம். ஜடேஜா அவுட் ஆக களமிறங்கிய தோனியை பார்த்து ஆர்ப்பரித்த ரசிகர்களுக்கு தக்க விருந்தளித்தார் தல தோனி. இரண்டு பந்துகளில் இரண்டு சிக்சர்கள் அடிக்க, 20 ஓவர் முடிவில் சரியாக 200 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு விக்கெட்கள் கடைசி பந்தில் 3 ரன் தேவையாக இருந்த நிலையில், பேட்ஸ்மேன் பந்தை பவுண்டரிக்கு தட்டி விட, அதனை தடுத்தனர் சிஎஸ்கே வீரர்கள். எனினும், மூன்று ரன்களை ஓடியே எடுத்தனர். 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி.

போட்டி முடிந்து பேசிய தோனி, “எங்கள் திட்டத்தில் பிரச்னையா, இல்லை திட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்னையா என தெரியவில்லை. அதனை சரி செய்ய வேண்டும்” எனப் பேசியிருந்தார்

இரண்டாவதாக நடந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இது ஐபிஎல்லின் 1000வது போட்டி. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அதிரடி காட்டியது. வெறும் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் அணி 212 ரன் எடுக்க முக்கிய காரணமாக அமைந்தார் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

மும்பை அணியும் வெற்றி பெற வாய்ப்பை தேடி வந்த நிலையில், நேற்றைய போட்டி அவர்களுக்கு சாதகமாக அமைந்தது என்றே சொல்லலாம். கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் அனைவருமே சிறப்பாக விளையாட, மாலை நடந்த போட்டி போலவே கடைசி ஓவர் வரை த்ரில்லிங்காக சென்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி

நேற்று நடந்த நான்கு இன்னிங்க்ஸிலுமே அணிகள் 200 ரன்களை கடந்தன. இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள 2023ன் ஐபிஎல் போட்டிகளில், ரசிகர்கள் தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்ற கால்குலேஷனை போட ஆரம்பித்துவிட்டனர்.

ஒவ்வொரு போட்டியின் முடிவிலும், இதுவே எம் எஸ் தோனியின் கடைசி காலம், இந்த சீசனுக்கு பிறகு ஐபிஎல்லில் இருந்து அவர் ஓய்வு பெற்ற் விடுவார் என்ற பேச்சுக்கள் அடிபடுகிறது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும், கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?