Dhoni: சேப்பாக்கத்தில் களமிறங்கிய தோனி; எச்சரித்த ஸ்மார்ட் வாட்ச்- ஏன்? |Viral புகைப்படம்  ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

Dhoni: சேப்பாக்கத்தில் களமிறங்கிய தோனி; எச்சரித்த ஸ்மார்ட் வாட்ச்- ஏன்? |Viral புகைப்படம்

Keerthanaa R

நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாட எம் எஸ் தோனி களமிறங்கிய போது மைதானத்தில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இந்த சத்தம் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும், இதனால் காது கேளாமை ஏற்படலாம் எனவும் ரசிகர் ஒருவரின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரித்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2023ன் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியினை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் சென்னை அணி கேப்டன் எம் எஸ் தோனி. சேப்பாக்கத்தில் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது

களமிறங்கிய சென்னை வீரர்கள், டெல்லி அணியின் சுழலில் சிக்கித் தவித்தனர். கான்வே, ருதுராஜ், மோயின் அலி என எல்லோரும் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தது.

இது சென்னை அணியை பலவீனமாக்கினாலும், ரசிகர்களுக்கு என்னவோ உற்சாகமாக தான் இருந்தது. காரணம் அவர்களின் ’தல’ தோனி பேட்டிங் ஆட களமிறங்குவார் என்பதனால்.

அவர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றினார் தோனி. அவர் களமிறங்கவேண்டிய தேவையும் ஏற்பட்டது.

பேர் எதிர்பார்ப்புடன் தோனி களமிறங்குவது இது ஒன்றும் புதிதில்லை என்றாலும் நேற்றின் கதை இன்னும் சுவாரஸ்யமானது. மைதானத்தில் அவரின் வருகைக்காக காத்திருந்த ரசிகர்களில் ஒருவர் தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அது அவருடைய ஸ்மார்ட் வாட்சின் புகைப்படம். அதில் ஒரு செய்தி இருந்தது.

“சத்தமான சுற்றுச்சூழல். சத்ததின் அளவு 90 டெசிபலை விடவும் அதிகமாக இருக்கிறது. சத்ததின் அளவு இப்படியே குறைந்தது 30 நிமிடங்கள் நீடித்தால் தற்காலிக காது கேளாமை ஏற்படலாம்” என்று எச்சரித்திருந்தது அந்த ஸ்மார்ட் வாட்ச்.

இந்த ‘அளவுக்கு அதிகமான சத்தத்தை’ அந்த வாட்ச் கணித்தது தோனி பேட்டிங் ஆட களமிறங்கியபோது தான். ரசிகர் பகிர்ந்த இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

தோனி, இரண்டு சிக்சர்கள், ஒரு பௌண்டரி உட்பட, 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால் ரசிகர்களுக்கு அதுவே விருந்தாக அமைந்தது. சென்னை அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவதாக ஆடிய டெல்லி அணி, 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 15 புள்ளிகள் பெற்றுள்ள சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது. பிளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பும் வலுவடைந்துள்ளது.

சென்னை அணிக்கு டெல்லிக்கு எதிராக ஒரு போட்டியும், கொல்கத்தா அணியுடன் ஒரு போட்டியும் மீதமிருக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?