தோனி Twitter
ஸ்போர்ட்ஸ்

தோனி: சேப்பாக்கில் CSKவுக்கு முதல் வெற்றி- வெளுத்துக்கட்டிய ருதுராஜ்; தல கொடுத்த வார்னிங்!

Keerthanaa R

நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஆனால், இந்த வெற்றிக்களிப்பை முழுமையாக கொண்டாட முடியாத வண்ணம் வந்துள்ளது சிஎஸ்கே கேப்டன் தோனி கொடுத்துள்ள வார்னிங்.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

சென்னை அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்தது ருதுராஜ் - கான்வாய் இணை. ருதுராஜுக்கு சென்னையில் இது முதல் போட்டி. சென்னை அணி 110 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ருதுராஜ் ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஒரு பக்கம் சீராக சிஎஸ்கே ரன் குவிக்க, மறுப்பக்கம் போதிய இடைவெளியில் விக்கெட்களும் விழுந்தன.

20வது ஓவரில் களமிறங்கினார் தோனி. முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டவர், மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார். நேற்று தோனி அடித்த 12 ரன்களுடன், ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை அவர் கடந்திருந்தார்.

20 ஓவர் முடிவில் 217 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் இழந்திருந்தது சென்னை அணி. 218 என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோவும் முதல் பந்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, 10 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே 100 ரன்களை கடந்திருந்தது.

சென்னை சுழற்பந்து வீச்சாளர்கள் லக்னோ பேட்டிங்கை கட்டுக்குள் வைத்தனர். மோயின் அலி அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

எனினும் மறுபக்கம் வேகப்பந்து வீச்சாளர்கள், அதிகமாக நோ பால் மற்றும் வைடுகளை அள்ளி வீசவே, அணியின் வெற்றி கேள்விக்குறியானது. கடைசி நான்கு ஓவர்களில் மட்டும் 7 வைடுகளை கொடுத்திருந்தனர் சென்னை வேகப்பந்து வீச்சாளர்கள்.

விறுவிறுப்பாக சென்ற போட்டியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் தான் சென்னை வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது சிஎஸ்கே.

ஆட்டம் முடிந்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, ”வேகப்பந்து வீச்சில் இன்னும் முன்னேற்றம் தேவை. நிலையை அறிந்து செயல்படவேண்டும். எதிரணி பந்துவீச்சாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவேண்டும்.

எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் நோ பால், வைடுகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், இல்லை என்றால், புதிய கேப்டனுக்கு கீழ் விளையாட நேரிடலாம். இது என்னுடைய இரண்டாவது எச்சரிக்கை, இதன் பிறகு நான் சென்றுவிடுவேன்.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தோனி.

இதனால் அணியும் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். நேற்றைய அட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே 142 ரன்கள் கொடுத்துள்ள நிலையில், 3 நோ பால் மற்றும் 13 வைடுகளை வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?