டெல்லி அணியின் கோச் ரிக்கி பாண்டிங் சொன்னது என்ன? ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

IPL : "ரிஷப் பண்ட் விளையாடாவிட்டாலும்" - டெல்லி அணியின் கோச் ரிக்கி பாண்டிங் சொன்னது என்ன?

Keerthanaa R

ரிஷப் பண்ட் வரும் ஐபில் தொடரில் விளையாடாவிடினும், எங்களுடன் டக் அவுட்டில் எனதருகில் அமர்ந்திருக்க வேண்டும் என மனம் திறந்துள்ளார் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியன்று இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். கார் பற்றி எரிந்ததில் காயமடைந்த பண்ட் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் இவர், கிட்ட தட்ட அடுத்த ஆண்டு வரை விளையாடுவது கடினம் தான் என மருத்துவர்க்ள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு சம்மரில் ஐபிஎல் தொடர், தவிர இன்னும் சில மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பையும் நடைபெறவுள்ளது. இந்த தொடர்கள் எதிலும் பண்ட் விளையாடமாட்டார்.

இந்த செய்தி அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், சக அணி வீரர்களுக்குமே ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல்லில் ரிஷப் பண்ட் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டனுமான ரிக்கி பாண்டிங் இது குறித்து மனம் திறந்துள்ளார்.

ரிஷப் பண்ட் ஒரு சிறந்த, கைத்தேர்ந்த தலைவன் எனக் குறிப்பிட்ட பாண்டிங், “ரிஷப் பண்ட் போன்ற ஆட்கள் மரங்களில் காய்ப்பதில்லை. இவர்களுக்கு மாற்றாக ஆள் வேண்டும் என்றால், தேடவேண்டும்” என்றும் கூறியுள்ளார்

மேலும், “ரிஷப் பண்ட் விளையாட தகுதிபெறாவிடினும், அவர் எங்களுடன் டக் அவுட்டில் அம்ர்ந்து மேட்சை பார்க்கவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அவரது தலைமை அணிக்கு தேவை. அவரது குணாதிசியம், மகிழ்ச்சி, புன்னகை தான் அவரிடம் எங்களை ஈர்த்தது. அந்த உந்துகோல் எங்களுக்கு வேண்டும்” என்றும் அவர் பேசியிருந்தார்.

ரிஷப் பண்ட்டின் உடல்நிலை அவர் பயணம் செய்ய ஒத்துழைக்கும் பட்சத்தில், அவர் என்னுடன், எனதருகில் போட்டிகள் நடக்கும் ஒவ்வொரு நாளும் அமரவேண்டும். மார்ச் மாதத்தில், போட்டிகள் தொடங்கும் சமயத்தில், அணி வீரகள் பயிற்சிகளை தொடங்குவர். அப்போது ரிஷப் வந்தால், அவர் எங்களுடனே இருக்கவேண்டும் என்றார் பாண்டிங்.

ஆரம்பக் காலங்களில் பண்ட் ஒரு சிறந்த டி20 வீரராகவோ, அல்லது ஒரு நாள் பேட்டர் ஆகவோ உருவெடுப்பார் என்று தான் நாம் அனைவரும் கருதிவந்தனர். ஆனால், இன்று அவர் ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மன் ஆக வளர்ந்திருக்கிறார்.

அவர் அணியில் இல்லாதது, அடுத்து இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் தொடரில் ஒரு பின்னடைவாக அமையும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?