CSK vs RCB: ”Result பற்றிய கவலை எனக்கு இல்லை” வெற்றிக்கு பின் என்ன பேசினார் கேப்டன் தோனி? ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

CSK vs RCB: ”Result பற்றிய கவலை எனக்கு இல்லை” வெற்றிக்கு பின் என்ன பேசினார் கேப்டன் தோனி?

Keerthanaa R

ஐபிஎல் 2023ன் நேற்றைய ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

என்ன தான் வெற்றிப்பெற்றாலும், வழக்கம் போல கடைசி நிமிடம் வரை பரபரப்பாக சென்றது ஆட்டம். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் எப்போதும் போலவே BP மாத்திரைகளை தேட ஆரம்பித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே கடைசி பந்து வரை ஆட்டத்தை நீட்டித்து சென்று வெற்றியோ தோல்வியோ பெறுவதை வழக்கமாக்கியது சென்னை அணி. நேற்றைய போட்டியும் அப்படியே இருந்தது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பௌலிங்கை தேர்வு செய்தது. எப்போதும் அதிரடி காட்டும் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் பெவிலியன் திரும்ப இம்முறை பொறுப்பை ஏற்றுக்கொண்டனர் ரஹானே மற்றும் கான்வே.

83 ரன்களில் கான்வேவும் 37 ரன்களில் ரஹானேவும் ஆட்டமிழக்க, சிவம் தூபே சிக்ஸ் ஃபோர் என விளாசி 52 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில், 226 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி.

227 என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, ஏமாற்றமளித்தார் கிங் கோலி. லம்ரோரும் பூஜ்ஜியத்துக்கு அவுட்டாக, இணைந்த ‘எல்லச்சாமி’ டுப்ளெசி மற்றும் தமிழ்நாட்டு மருமகன் மேக்ஸ்வெல் ஜோடி சென்னை பௌலர்களுக்கு ஆட்டம் காட்டினர்.

நங்கூரம் போட்டு நின்ற இருவரும் தங்கள் பங்கிற்கு அரைசதங்களை கடக்க, 9 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது அணி. 12வது ஓவரில், 76 ரன்களுக்கு மஎக்ஸ்வெல்லும், 14வது ஓவரில் டுப்ளெசியும் வெளியேறினர்.

பின்னர் களமிறங்கிய ஷாபாஸ் நதீம், தினேஷ் கார்த்திக், பிரபுதேசாய் வெகு நேரம் நீடிக்கவில்லை. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், சிறப்பாக பந்துவீசி, சென்னை அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு இட்டு சென்றார் பதிரனா.

6 புள்ளிகளுடன் தற்போது 3வது இடத்தில் இருக்கிறது சி எஸ் கே

போட்டி முடிந்து பேசிய தோனி,

"200 ரன்களுக்கு மேல் இலக்கு இருக்கும்போது பேட்டர்கள் அதிரடியாக விளையாடுவது சகஜம் தான். மேக்ஸ்வெல்லும், டுப்ளெசியும் களத்தில் இருந்திருந்தால், 18, 18.5 ஓவர்களில் ஆட்டம் முடிந்திருக்கும் (ஆர் சி பி வென்றிருக்கும்). அப்படி இருக்கையில், என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து, பௌலிங்கில் மாற்றம் தேவைப்படுகிறது என்றால் அதனை செய்யவேண்டும்.

ஆட்டத்தின் போக்கை வைத்து என்ன செய்யவேண்டும் என்பதை தான் நான் சிந்திப்பேனே தவிர, விளைவை பற்றி கவலைகொள்ள மாட்டேன். பௌலர்களுக்கு சரியான அறிவுரைகளை வழங்கி அவர்களை நல்ல மனநிலையில் வைத்திருக்க என்னால் முடிந்தால், அதுவே எனக்கு வெற்றி தான்.

இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் இருக்கிறது தான். அந்த வகையில் பிராவோ உதவுகிறார். அவரும் தக்க அறிவுரைகளை வழங்கி வருகிறார், ஒரு விஷயம் சரி வராமல் போனால் அதற்கு மாற்று வழிகளையும் கற்று தருகிறார். அது நல்ல பக்கபலமாக இருக்கிறது” என்று பேசினார் தோனி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?