Rishabh Pant - கபில் தேவ்  ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

Rishabh Pant: ”ஓட்டுநரை வைத்துக்கொள்ளலாமே?” பண்ட் விபத்து குறித்து கபில் தேவ் விமர்சனம்

Keerthanaa R

கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் கார் விபத்துக்குள்ளாகி அவர் சிக்கிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் கபில் தேவ்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். இவரது தலைமையில் தான் இந்திய அணி முதன் முதலில் உலகக்கோப்பையை வென்றது. அவ்வப்போது இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் விளையாட்டு குறித்தும் தன் விமர்சனங்களை அவர் முன்வைப்பார்.

தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கபில் தேவ்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகாலை சாலை விபத்தில் சிக்கினார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.

டெல்லியிலிருந்து தன் சொந்த ஊருக்கு வந்துக்கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் டிவைடர் மீது மோதியதில், பெரும் விபத்து ஏற்பட்டது. கார் தீப்பற்றி எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பண்ட்.

கை, கால், கால், முதுகு பகுதிகளில் காயமடைந்த பண்ட் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிக்கிச்சையளிக்கப்பட்டது.

அவர் ஆபத்தான நிலையை கடந்துவிட்டதாகவும் பின்னர் தகவல்கள் வெளியாகின. ரசிகர்கள், கிரிக்கெட் வட்டாரங்கள், பிரபலங்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தனர்.

கபில் தேவ்

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவும் தன் கருத்தை தெரிவித்துள்ளார். இளம் வீரர்கள், தங்கள் பாதுகாப்பை முதன்மையாக கருதவேண்டும் எனவும் சற்றே கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இது ஒரு பாடம். எனது இளமைக் காலத்தில் நானும் ஒரு முறை இருசக்கர வாகன விபத்தில் சிக்கினேன். அப்போது தான் கிரிக்கெட்டில் நான் மெல்ல வளர்ந்து வந்துக்கொண்டிருந்தேன். விபத்திற்கு பிறகு எனது சகோதரர் என்னை வண்டியை தொட்டுப் பார்க்கக் கூட விடவில்லை. பண்ட் உயிர்பிழைத்ததற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், பண்ட் போன்ற வீரர்களால் நிச்சயம் ஒரு ஓட்டுநரை பணியமர்த்திக்கொள்ள முடியும், சொகுசு கார்களை வைத்திருக்கும் பட்சத்தில், இவர்கள் பத்திரமாக இருக்கவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

“இந்த வயதில் உங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் உங்களுக்கு பொறுப்புகளும் இருக்கின்றன. உங்களை நீங்கள் தான் கவனித்துக்கொள்ள முடியும், உங்களுக்கான முடிவுகளை நீங்கள் தான் எடுக்கவேண்டும்” எனவும் அவர் கூறியிருக்கிறார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?