100 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் நெல்லையை சூறையாடியதா வெள்ளம்? Twitter
தமிழ்நாடு

100 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் நெல்லையை சூறையாடியதா வெள்ளம்?

100 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே தேதியில் நெல்லையை ஒரு பயங்கர வெள்ளம் மூழ்கடித்தது பற்றி உங்களுக்கு தெரியுமா? 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'தி இந்து' ஆங்கில நாளிதழில் இதுதொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

Priyadharshini R

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் ஏற்பட்ட கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்துள்ளன. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 100 செ.மீ.க்கு மேலே மழை அளவு பதிவாகிருக்கிறது.

நெல்லையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்துக்கு பருவநிலை மாற்றமே காரணம் என ஒரு சிலர் கூறி வந்தாலும், தமிழகத்திற்கு பேரழிவு வரப் போவதற்கான தொடக்கம் என சிலர் கூறி வருகின்றனர்.

ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே தேதியில் நெல்லையை ஒரு பயங்கர வெள்ளம் மூழ்கடித்தது பற்றி உங்களுக்கு தெரியுமா?

100 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'தி இந்து' ஆங்கில நாளிதழில் இதுதொடர்பான செய்தி வெளியாகியுள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் 1923ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி வெளியான அந்த செய்திதாளில் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கடந்த 4 நாட்களாக அதிக அளவிலான வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாகவும், பல நீர்நிலைகளும் நிரம்பி ஓடுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் டிசம்பர் 16ஆம் தேதி முதல்.. இப்போதும் அதே தேதியில்தான் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?