கல்யாண பத்திரிகை  Twitter
தமிழ்நாடு

ஆதார் கார்ட் வடிவில் கல்யாண பத்திரிகை - அருப்புக்கோட்டைக் காரரின் பலே ஐடியா!

Antony Ajay R

வித்தியாசமான கல்யாணப் பத்திரிகைகள் வலம் வருவது வாடிக்கையாகிவிட்டது. புதிய முயற்சிகள், கவனம் ஈர்க்கும் நடவடிக்கைகளை மணமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாதிரியான பத்திரிகைகள் உருவாவதரு பிரத்யேக காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்த விநொத சிந்தனைகள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தற்போதும் விஜயன் என்ற மணமகன் ஆதார் கார்ட் மாதிரியான திருமண பத்திரிகையை வடிவமைத்திருப்பது பிரபலமாகி வருகிறது.

பார்ப்பதர்கு அச்சு அசலாக ஆதார் அட்டைப் போல இருக்கும் இந்த பத்திரிக்கையில் பல அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மணமக்களின் புகைப்படம், மண்டபம், திருமண நாள், உறவினர் பெயர்கள் போன்ற தகவல்கள் இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதில் சிறப்பாக, திருமண நாள் ஆதார் எண் போல கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றும் QR கோட் ஸ்கேன் செய்தால் திருமண மண்டபம், நாள் போன்ற தகவல்கள் கிடைக்கும் படி வைத்துள்ளனர்.

நம்ம வீட்டு கல்யாணம் என்ற தலைப்பில் இந்த ஆதார் கார்ட் திருமணப் பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டுள்ளது.

விஜயன் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நபர். இவருக்கு வரும் ஐந்தாம் தேதி திருமணமாம்.

வட இந்தியாவிலும் இதே போல ஒரு திருமண பத்திரிக்கை ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?