ALT News ஜுபீருக்கு மதநல்லினக்கத்துக்கான விருது - அவர் பேசியது என்ன? Twitter
தமிழ்நாடு

ALT News ஜுபீருக்கு மதநல்லினக்கத்துக்கான விருது - அவர் பேசியது என்ன?

Antony Ajay R

சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளில் இருந்து உண்மையைக் கண்டறியும் ALT-News என்ற வலைத்தளத்தை நடத்திவரும் ஊடகவியலாளர் முகமது ஜுபீருக்கு குடியரசு தினத்தில் மத நல்லிணக்கத்துக்கான விருதை வழங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு.

தமிழக அரசின் அங்கீகரத்தை பெறுவதில் மகிழ்ச்சி எனப் பேசிய அவர், "தமிழ்நாடு அரசிடம் இருந்து மத நல்லிணக்க விருதைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி. அரசாங்கத்திடம் இருந்து எனக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. குடியரசு தினத்தன்று அரசிடம் இருந்து இத்தகைய அங்கீகாரம் பெறுவது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி!" என்று பேசினார்.

மேலும், "2023 மார்ச்-ல் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் போலியான பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாவதைப் பார்த்ததும் உடனடியாக எனக்கு தெரிந்துவிட்டது இது தமிழ்நாட்டில் நிகழ்ந்தது அல்ல என்று. ஏனென்றால் அந்த வீடியோக்களை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன். அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்த பின்புதான் எனக்கு தெரியவந்தது அனைத்து வீடியோக்களுமே போலி என்று. அச்சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என உறுதி செய்தேன்" என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?