Thanjavur: ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? twitter
தமிழ்நாடு

Thanjavur: ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா?

தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் கோவில் தான் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். இதனை தஞ்சை பெரிய கோவில் என்றும் அழைக்கின்றனர். இந்த தஞ்சை பெரிய கோவில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்

Keerthanaa R

இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள் ஊன்றியிருக்கின்றன. அதன் சான்றாகவே பல வழிபாட்டு தாங்கள் கோவில்கள் விளங்குகின்றன எனலாம்.

குறிப்பாக இந்தியாவை ஆண்ட மன்னர்கள், கட்டிடக்கலைகளின் மீது மிகுந்த ஆர்வம் வைத்திருந்தனர், இதன் விளைவாக இவர்கள் எழுப்பிய கோவில்கள் கலைநயத்தினை போற்றியது.

அப்படி தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் கோவில் தான் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். இதனை தஞ்சை பெரிய கோவில் என்றும் அழைக்கின்றனர்.

இந்த தஞ்சை பெரிய கோவில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்

  • இந்த தஞ்சை பெருவுடையார் கோவில், அதன் கட்டிடக்கலை மகத்துவம், மத முக்கியத்துவம் மற்றும் கலாச்சார அழகியலுக்காக யுனெஸ்கோவின் பாரம்பரிய தலமாக அங்கீகரிப்பட்டது.

  • இந்த கோவிலை 11ஆம் நூற்றாண்டில், அப்போது சோழ அரசராக விளங்கிய அருள்மொழி வர்மன் என்ற ராஜ ராஜ சோழன் கட்டினார்.

  • சிவபெருமானுக்கு (பிரகதீஸ்வரர்) அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், உலகின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்று. இங்கு ஒரு ரகசிய வழிப்பாதையும் உள்ளது. இது அரண்மனை சிறைச்சாலைக்கு செல்லும் என தகவல்கள் கூறுகின்றன.

  • இது திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டமைக்கப்பட்ட கோவில். அதன் உயரமான விமானம் (கோபுரம்), நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் நேர்த்தியான சிற்பங்களால் அறியப்படுகிறது இக்கோவில்.

  • இந்த கோவிலின் மிக முக்கியச் சிறப்பு, கோவில் கோபுரத்தின் நிழல் நண்பகல் நேரத்தின் உத்திராயணத்தில், தரையில் விழாது. இன்றளவும், இதன் பின்னணி விஞ்ஞானிகள் போதுமக்கள் அனைவருக்குமே பிரமிக்கவைக்கும் மர்மமாகவே உள்ளது.

  • சோழர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைச் சித்தரிக்கும் அழகிய ஓவியங்களால் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஏராளமான கல்வெட்டுகள் மதிப்புமிக்க வரலாற்றுத் தகவல்களையும் வழங்குகின்றன.

  • இங்குள்ள நந்தி, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலைவடிவமாகும். இது 13 அரி நீளமும், 9 அடி உயரமும் கொண்ட சிலை.

  • இக்கோவிலின் பிரதான மண்டபத்தில் இசை தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணினை தீண்டும்போதும், ஒவ்வொரு விதமான இசையை நாம் கேட்க முடிகிறது.

  • கிட்ட தட்ட 3 கோடி உள்ளூர்வாசிகள், 4 லட்சத்துக்கும் மேல் வெளிநாட்டினர் தஞ்சை பெரிய கோவிலை ஆண்டுதோறும் பார்வையிடுகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?