mango tree Twitter
தமிழ்நாடு

வெட்டப்பட்ட மாமரத்தில் கொத்துக் கொத்தாகக் காய்த்த மாங்காய் - எப்படி சாத்தியம் ?

Priyadharshini R

இன்றைய நவீன உலகில் பல்வேறு ஆச்சரிய விஷயங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது. அதிலும் சில விஷயங்கள் நம்மால் நம்பவே முடியாத அளவில் இருக்கும். அப்படியொரு வேடிக்கையான விஷயம் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடந்துள்ளது.

உடுமலை அருகே வெட்டப்பட்ட மா மரத்தின் கிளையில் கொத்துக் கொத்தாய் மாங்காய்கள் காய்த்துத் தொங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுண்டம்மாள். இவர் தனது வீட்டுப் பகுதியில் சிவன் கோவில் ஒன்று அமைத்து அதனை வழிபட்டு வருகிறார். இந்த கோவில் பகுதியில் பத்து ஆண்டுகளான மாமரம் ஒன்று உள்ளது.

அந்த மாமரத்தின் தெற்குப் பகுதி கிளைகளில் இதுவரை மாங்காய்கள் காய்க்கவில்லை என்பதால் கோவில் விரிவாக்கத்திற்காக அதனை வெட்டியுள்ளனர்.

mango tree

அடுத்த நாள் காலையில் வெட்டப்பட்டுள்ள அந்தக் கிளை பகுதியிலிருந்து கொத்துக் கொத்தாக மாங்காய் காய்த்துத் தொங்கியதைக் கண்ட பொதுமக்கள் பிரம்மில் ஆழ்ந்தனர்.

மாங்காய்கள் எப்பொழுதும் கிளையிலிருந்து தான் காய்க்கத் துவங்கும். ஆனால் வெட்டப்பட்ட பகுதியிலிருந்து காய்கள் காய்த்து உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?