Meenakshi Temple
Meenakshi Temple  Twitter
தமிழ்நாடு

Meenakshi Temple : வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சியம்மன் கோவில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

Priyadharshini R

தெற்கின் தாஜ்மஹால் என்று அழைக்கப்படும் மதுரை மீனாட்சி கோவில், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கட்டிடக்கலை அடிப்படையில் பிரமாண்டமானது.

இது இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் கோயில்களில் ஒன்றாக உள்ளது.

இது தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க இடமாகும்.

இந்தக் கோவிலைப் பற்றி உங்களுக்கு இதுவரை தெரியாத சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளவும்.

ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம்

இந்த கோவில் ஆயிரம் கால் மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு பாறையில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு அற்புதமான கட்டிடக்கலையாகும்.

நீங்கள் கோயிலின் அருங்காட்சியகத்திற்குச் சென்றால், ஏராளமான பழங்கால ஓவியங்களைக் காண முடியும்.

சிவகாமி மற்றும் நடராஜரின் பிரமாண்ட சிலைகளைக் கொண்ட கோயிலின் மிகப்பெரிய மண்டபமும் இதுதான்.

கோபுரங்கள்

​​12 உயரமான கோபுரங்களை நீங்கள் இங்கே காணலாம்.

அவற்றில் நான்கு கோபுரங்கள் கோவிலின் நான்கு திசைகளிலும் வைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம் நான்கு உள் கோபுரங்கள் சன்னதியின் நுழைவாயில் உள்ளன.

இது ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்குப் பிறகும் சுத்தம் செய்யப்பட்டு புனரமைக்கப்படுகின்றன.

தங்க தாமரை குளம்

மீனாட்சியம்மன் கோவிலில் தங்கத் தாமரைக் குளம் என்று அழைக்கப்படும் குளம் உள்ளது.

இந்தக் குளம் தனிச்சிறப்பாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதற்குக் காரணம், இங்கு விளையும் தாமரை தங்கச் சாயலில் இருப்பதுதான்.

கோயிலின் மகிமை

இந்தக் கோவிலில் ஓவ்வொரு 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வப்போது திருப்பணி நடைபெறுகிறது.

கோவில் சிற்பங்கள் சரிபார்க்கப்பட்டு மீண்டும் வர்ணம் பூசப்படும் போது இந்த செயல்முறை ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுகிறது.

கோயிலின் மகிமை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சுமார் 33000 சிற்பங்கள்

இந்த வண்ணமயமான கோவிலின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம், இதில் சுமார் 33000 சிற்பங்கள் உள்ளன.

வெள்ளி பீடத்தில் கட்டப்பட்ட நடராஜரின் பரந்த சிற்பத்திற்காக குறிப்பாக பிரபலமானது.

​ஒவ்வொரு தூணிலும் பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டதாக நம்பப்படும் ‘ஆயிரம் தூண்களின் மண்டபத்தை’ பார்க்கலாம்.

மீனாட்சி சிலை

இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக இருக்கும் மீனாட்சி அம்மனின் சிலை மரகத நிற கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைக்கு மூன்று மார்பகங்கள் உள்ளன. ஏனெனில் மீனாட்சி தேவி மூன்று மார்பகங்களுடன் பிறந்ததாக நம்பப்படுகிறது.

சிவபெருமானின் வடிவமான சுந்தரேஸ்வரரைச் சந்தித்தபோது மூன்றாவது மார்பகம் மறைந்துவிட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?