சென்னை: ஒரு நாளில் சுற்றி பார்க்க ஒரு பட்ஜெட் ஸ்பாட் - Madras Museum போயிட்டு வரலாமா? twitter
தமிழ்நாடு

சென்னை: ஒரு நாளில் சுற்றி பார்க்க ஒரு பட்ஜெட் ஸ்பாட் - Madras Museum போயிட்டு வரலாமா?

Keerthanaa R

ஆசுவாசப்பட்டுக்கொள்ள கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். வார இறுதியில் கிடைக்கும் ஓரிரு நாள் விடுமுறை தான் நம்மை வேலை பளுவில் இருந்து கொஞ்சம் விடுபட வைக்கிறது.

இந்த லீவு நாட்களில் வீட்டில் இருந்து தூங்கி ஓய்வெடுப்பவர்கள் ஒரு ரகம். வீக்கெண்ட் வந்துவிட்டாலே இந்த சந்தோஷ் கான் அ கையில புடிக்க முடியாது என்று இருப்பவர்கள் ஒரு ரகம்.

கிடைக்கும் இந்த சின்ன லீவில எங்கப்பா போய்ட்டு வர்றது என்றால், சென்னையில் அதற்கு நிறைய இடங்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் எழும்பூரில் அமைந்திருக்கும் அரசு அருங்காட்சியகம்.

மெட்ராஸ் மியூசியம் என்றும் அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் மனித வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எடுத்து சொல்கிறது.

இந்த அருங்காட்சியகம் 1851ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் இந்த மெட்ராஸ் மியூசியம். முதலிடத்தில் கொல்கத்தாவில் அமைந்திருக்கும் இந்தியன் மியூசியம் இருக்கிறது. மெட்ராஸ் மியூசியத்தில் தொல்பொருள் மற்றும் நாணயவியல் சம்பந்தமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பண்டைய ரோமானியா தொடர்பான பல பொருட்களும் இந்த மெட்ராஸ் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மியூசியம் இந்தோ-சராசெனிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது.

மேலும் இங்கிருக்கும் கொலோசல் அருங்காட்சியக திரையரங்கம் மிக பிரபலம்.

சென்னை அருங்காட்சியகத்தில் மொத்தம் ஆறு கட்டிடங்கள் உள்ளன. இதனை சிக்ஸ் கேலரீஸ் என்று அழைக்கின்றனர், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளது.

போர் சமயத்தில் பயன்படுத்திய கவசங்கள், ஆயுதங்கள், மனிதர்கள் தங்களின் அன்றாடத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள், கற்கள் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அவர்கள் வழிபட்ட கடவுளர்களின் சிலைகளும் இங்கே நாம் காணலாம். இவற்றில் மீட்டெடுக்கப்பட்ட நூற்றாண்டு பழமையான சிலைகளும் உண்டு. தவிர மண்ணில் புதைந்த வெண்கல சிற்பங்கள் இருக்கின்றன.

பல வகையான, அரிதான பறவைகள், விலங்குகள், பூச்சிகளின் வடிவங்கள் இங்கு காணமுடிகிறது.

இங்கே வரையப்பட்டிருக்கும் ஓவியத்தில், ஆதி காலத்து மனிதனின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஓவிய அரசன் ராஜா ரவி வர்மா உள்பட பல முக்கிய ஐரோப்பிய ஆசியக் கலைஞர்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

மனிதனின் வாழ்க்கை எப்படி பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது, அறிவியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக நம் வாழ்க்கை முறை எப்படி மாறியிருக்கிறது என்பதை இந்த மியூசியத்திற்கு சென்று வந்தால் நாம் உணரலாம்.

இந்த சென்னை மியூசியம் எழும்பூரில் அமைந்திருக்கிறது. வெள்ளிக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் எல்லாம் மக்களுக்காக திறந்திருக்கிறது. காலை 9.30 மணி முதல் 5 மணி வரை அருங்காட்சியகம் செயல்படும்.

நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. பள்ளி குழந்தைகள் என்றால் ரூ.5 நுழைவுக் கட்டணம் செலுத்தவேண்டும்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் - பெரியவர்கள் ரூ.250, குழந்தைகள் ரூ. 125.

கேமராக்கள் கொண்டு செல்ல தனிக் கட்டணம் வசூலிக்கப்படும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?