ஆடு Twitter
தமிழ்நாடு

கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆடு; தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது

Antony Ajay R

கேரளாவில் காசர்கோடு அருகே கோட்டச்சேரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆடு வளர்த்து வந்துள்ளனர். அந்த ஆடு 4 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறது. கடந்த செவ்வாய்க் கிழமை அன்று நள்ளிரவில் ஹோட்டலில் வேலை செய்து வந்தவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது ஆடு கத்தும் சத்தம் கேட்டு விழித்திருக்கின்றனர்.

வழக்கத்துக்கு மாறாக ஆடு கத்தியதால் அச்சத்துடன் அதைச் சென்று பார்த்த போது மூன்று நபர்கள் ஆட்டை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வதைக் கண்டு அதிர்ச்சியுற்றிருக்கின்றனர்.

அவர்களை விரட்டி பிடிக்க முயன்ற போது இருவர் தப்பினர். ஒருவன் மட்டும் சிக்கினான். பிடிபட்ட நபர் அதே உணவகத்தில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் எனத் தெரியவந்துள்ளது. செந்திலைப் போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர். தப்பிச் சென்ற இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அவர்கள் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 மாத சினை ஆட்டை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?