National Flag painted in the eye Twitter
தமிழ்நாடு

75வது சுதந்திர தினவிழா: கண்களில் மூவர்ணக் கொடியை வரைந்துகொண்ட நபர் | வைரல் புகைப்படம்

Keerthanaa R

இந்தியச் சுதந்திர போராட்டங்களை குறித்தும், சுதந்திரத்துக்காக போராடிய வீரர்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தன் கண்களில் மூவர்ணக் கொடியை வரைந்துகொண்டுள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த வரலாற்று தருணத்தை கோலாகலமாக கொண்டாட, நாடு முழுவதிலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அனைவரும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் (ஹர் கர் திரங்கா), 24 கோடி தேசிய கொடிகள், தயாரிப்பு உணவகங்களில் மூவர்ண உணவுவகைகள் என மக்களும் அரசும் தயாராகி வருகின்றன.

முகங்களில் வர்ணம் பூசிக்கொள்வது, ஆடைகளை மூவர்ணத்தில் உடுத்திக்கொள்வது போன்ற செயல்கள் மூலம் தேசத்தின் மீதான பற்றை நாம் காண்பித்திருப்போம். கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தனது கண்ணில் இந்திய தேசிய கொடியை வரைந்துள்ளார்.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த UMT ராஜா ஒரு சமூக ஆர்வலர்.

இவர் ஒரு மினியேச்சர் கலைஞரும் கூட. ராஜா மிக கவனமாக தேசிய கொடியின் மினியேச்சரை முட்டை ஓட்டின் உள்ளே வெள்ளை கருவின் மீது மெல்லிய துணி போன்ற படலத்தில் வரைந்து, அதை கண்ணில் உள்ள ஸ்க்லெராவுடன் ஒட்டிக்கொண்டார்.

இதன் வீடியோவை பகிர்ந்த ராஜா, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதை செய்ததாகவும், ஆனால், மக்கள் யாரும் இந்த முறையை பின்பற்றவேண்டாம் என்றும் தெரிவித்தார்.

இவரது இந்த செயல் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?