தேர்வில் முதலிடம்! இணையத்தை கலக்கும் 108 வயது தமிழக மூதாட்டி - யார் இந்த கமலகண்ணி? Twitter
தமிழ்நாடு

தேர்வில் முதலிடம்! இணையத்தை கலக்கும் 108 வயது தமிழக மூதாட்டி - யார் இந்த கமலகண்ணி?

Priyadharshini R

தமிழகத்தைச் சேர்ந்த கமலகண்ணி என்ற 108 வயது மூதாட்டி, வயது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாமல் கேரள அரசால் தொடங்கப்பட்ட எழுத்தறிவுத் திட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) கணக்கெடுப்பின்படி, 96.2% கல்வியறிவு விகிதத்துடன், இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா உள்ளது.

மூத்த குடிமக்கள் கல்வி அறிவைப் பெற உதவுவதற்காக, "அனைவருக்கும் மற்றும் எப்போதும் கல்வி" என்ற ஒரு முயற்சியை கேரள அரசு முன்னெடுத்தது.

வயதானவர்கள் தங்கள் பெயர்களில் கையெழுத்திட முடியும், எந்த வயதிலும் ஆர்வம் உள்ள முத்த குடிமக்கள் கல்வி கற்க முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.

கேரள அரசால் தொடங்கப்பட்ட எழுத்தறிவுத் திட்டத்தில் தான் படித்து முதலிடம் பிடித்துள்ளார் கமலகண்ணி.

யார் இந்த கமலகண்ணி?

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் என்ற ஊரில் 1915 ஆம் ஆண்டு பிறந்தவர் கமலகண்ணி. இவர் இரண்டாம் வகுப்பு முடித்தவுடன் பள்ளியை விட்டு வெளியேறியிருக்கிறார்.

தமிழக கேரள எல்லையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வண்டன்மேடு பகுதியில் குடும்பத்துடன் ஏலக்காய் வயல்களில் வேலை செய்யத் தொடங்கினார்.

அங்கு ஏலக்காய் பண்ணைகள் ஏராளமாக இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்குச் சென்றதை கண்டு கமலக்கண்ணியும் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

இளம் பெண்ணாக இருக்கும் போது அங்கு வேலைக்கு சென்ற கமலக்கண்ணி தனது வாழ்நாளின் கடைசி 80 ஆண்டுகளை ஏலக்காய் பண்ணைகளில் செலவிட்டார்.

எல்லா நேரமும் பண்ணையில் வேலை செய்ய வேண்டியிருந்ததால் அவரால் பள்ளிப் படிப்பை முடிக்க முடியவில்லை.

இந்த 108 வயது மூதாட்டி கேரளாவின் எழுத்தறிவு திட்டத்தில் சேர்ந்து படிக்க ஆரம்பித்துள்ளார். அவருக்கு சிறந்த செவித்திறன் மற்றும் பார்வை உள்ளது. இந்த முயற்சிக்காகவே கமலக்கண்ணி பலரின் பாராட்டுகளை பெற்றார்.

அவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதத் தொடங்கினார்.

மேலும் எழுத்தறிவுத் திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் 100க்கு 97 மதிப்பெண்களைப் பெற்றார். வயதானாலும் அவர் திட்டத்தில் பங்கேற்க விரும்பியதை கேரளாவில் உள்ள பல அமைப்புகள் பாராட்டுகின்றன.

இதுகுறித்து கமலக்கண்ணியின் பேரன் கூறுகையில், ”அடுத்த மாதம் பாட்டியின் 109வது பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தனது முதிர்ந்த வயதிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக கேரள அரசும் அவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது” என்றார்.

தற்போது இவர்கள் குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையினர் வண்டன்மேட்டில் வசிக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?