தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - ஸ்னோலின் தாயார் வழக்கு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - ஸ்னோலின் தாயார் வழக்கு! Twitter
தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - ஸ்னோலின் தாயார் வழக்கு!

Antony Ajay R

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவராகக் குற்றம்சாட்டப்பட்ட அன்றைய தென் மண்டல ஐ.ஜி.சைலேஷ்குமார் யாதவுக்குத் தமிழ்நாடு அரசு டிஜிபியாகப் பதவி உயர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலின் என்பவரின் தாயர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.

அவரது மனுவில், துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும் வழக்கு பதிவு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் தவறு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரியதுடன் அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என்றும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

துப்பாகிச்சூடு நடந்தபோது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார். அதைக் குறிப்பிட்டு உயிரிழந்தவர்கள் 13 பேரின் குடும்பத்துக்கும் தலா 1 கோடி வழங்க வேண்டும் எபக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?