தேவிபாரதி : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்திய எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது! Twitter
தமிழ்நாடு

தேவிபாரதி : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்திய எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது!

Antony Ajay R

எழுத்தாளர் தேவி பாரதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது.

ராஜசேகரன் என்கிற தேவி பாரதிக்கு அவரது நீர்வழிப் படூஉம் என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

சாகித்திய அகாடமி விருது இன்று அறிவிக்கப்பட்டாலும் கடந்த டிசம்பர் 11ம் தேதியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் வாழ்த்தி விட்டனர்.

சாகித்திய அகாடமி விருது அறிவிக்கும் முன்னரே பிரபலங்கள் வாழ்த்துவது எப்படி என்ற கேள்வி எழுந்தது. எனினும் வாழ்த்தியபடியே அவருக்கு விருதும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜசேகரன் தேவிபாரதி நீண்ட நாட்களாக தமிழில் எழுதிவருபவர்.

ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டைச் சேர்ந்தவர் தேவிபாரதி. இவர் பல சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், திரைப்பட கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

அரசியல் கட்டுரைகளும், நெருக்கடி நிலை மற்றும் இடதுசாரி இயக்கங்களில் செயல்பட்டதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் எழுதியிருக்கிறார்.

இவரது படைப்புகளுக்காக ஜெயந்தன் விருது, அறிஞர் போற்றுதும் விருது, திருச்சி தன்னறம் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?