தென் கொரியா: நாட்டில் உள்ள அனைவருக்கும் 1 வயது குறைகிறதா? எப்படி சாத்தியம்? Twitter
உலகம்

தென் கொரியா : நாட்டில் உள்ள அனைவருக்கும் 1 வயது குறைகிறதா? எப்படி சாத்தியம்?

Priyadharshini R

தென்கொரியர்கள் அனைவருக்கும் நேற்று முதல் ஒரு வயது குறைந்துவிட்டது. மக்கள் இளமையாக காட்சியளிக்கலாம் ஆனால் எப்படி ஒரு வயது குறையும்?

அந்நாட்டு மக்கள் அனைவரும் இளமையாகப் போவதில்லை, வயது என்ற எண்ணிக்கையில் மட்டும் ஒன்றை குறைத்துக் கொள்ளப் போகிறார்கள். ஏன் அப்படி? விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

தென்கொரியா கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தால், அந்நாட்டில் அனைவருக்குமே ஒன்று அல்லது இரண்டு வயது குறையும். இந்த சட்டம், தென்கொரியாவில் தற்போது வழக்கத்தில் உள்ள 2 பாரம்பரிய வயது கணக்கிடும் நடைமுறைகளை கைவிட்டு, சர்வதேச நடைமுறைக்கு மாற வழிவகை செய்கிறது.

newborn baby

பாரம்பரிய வயது கணக்கிடும் முறை என்றால் என்ன?

நவீன உலகில், குழந்தையின் வயது பிறக்கும்போது பூஜ்ஜியத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. ஆனால் பாரம்பரிய கொரிய வயது முறையின்படி, புதிதாகப் பிறந்த குழந்தை, அது பிறந்தவுடனே ஒரு வயதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் கருவில் இருக்கும் மாதத்தையும் அவர்கள் கணக்கிடுகிறார்களாம்.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி பிறக்கும் போது ஒரு வயது கூடிவிடும். அதன்படி, டிசம்பர் 31-ம் தேதி பிறக்கும் குழந்தை அடுத்த நாளே 2 வயதை எட்டிவிடுமாம்.

அங்குள்ள மற்றொரு வயது கணக்கீடு முறையின்படி, ஒவ்வொருவருக்கும் பிறக்கும் போது வயது 0, அடுத்து வரும் ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியும் ஒரு வயது கூடும்.

இதனால் தென் கொரியர்கள் பொதுவாக மற்ற இடங்களில் உள்ளவர்களை விட ஒன்று முதல் இரண்டு வயது மூத்தவர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

மாற்றம் ஏன் செய்யப்பட்டது?

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போதே இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டினார். பாரம்பரிய வயது கணக்கீடு நடைமுறைகள் தேவையற்ற சமூக, பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகிறது என்பது அவரது கருத்து.

வயது வரம்பு

மதுபானம் அல்லது சிகரெட் வாங்குவதற்கான சட்டப்பூர்வ வயது முன்பைப் போலவே இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுபானம் மற்றும் புகையிலை வாங்குவதற்கு அனுமதிக்கப்படாத சிறார்களின் வரையறை இளைஞர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 19 க்குக் கீழே இருக்கும் என்று குடும்ப அமைச்சகம் செவ்வாயன்று கூறியதாக இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, 2004 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் மட்டுமே மதுபானம் அல்லது சிகரெட் வாங்க முடியும்.

கல்விச் சட்டத்தின்படி குழந்தைகள் தொடக்கப் பள்ளிகளுக்குச் செல்லும் சட்டப்பூர்வ வயதும் அப்படியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?