Amazon Alexa  Twitter
உலகம்

Amazon: தீ விபத்தில் இருந்து ஆறு பேர் உயிரை காப்பாற்றிய Alexa - எப்படி?

Priyadharshini R

அமெரிக்காவில் தீ விபத்து குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்து ஒரு குடும்பத்தையே அலெக்சா காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்தது.

திடீரென நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தீ விபத்து காரணமாக வீட்டினுள் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த புகைமூட்டம் பரவத் தொடங்கும் போது, வீட்டில் இருந்த அலெக்சா அதனை உணர்ந்து உடனடியாக ஒலி எழுப்பி வீட்டில் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது

தூக்கத்திலிருந்து எழுந்த குடும்பத்தினர் அங்கு சூழ்நிலிருந்த புகை மண்டலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தன. சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

எளிதில் தீபற்றக்கூடிய எலெக்ட்ரிக் பொருட்கள் வெப்பமயமாதல் காரணமாக தீ பற்றியிருக்க கூடும் என்றும் அதிகாரிகள் விளக்கினர். தீயால் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு தோராயமாக $175,000 அமெரிக்க டாலர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலெக்சா என்பது அமேசானின் செயற்கை நுண்ணறிவு தொழில்னுட்ப வசதி என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?