கோட்டபயாவுடன் நிஸ்ஸங்க சேனாதிபதி  Facebook
உலகம்

இலங்கை நெருக்கடி : அதிபர் கோட்டபயாவின் நெருங்கிய நண்பர் தீவு தேசத்தை விட்டு வெளியேறினாரா?

NewsSense Editorial Team

இலங்கை அதிபர் கோட்டபயாவின் நெருங்கிய சகாவான அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி இலங்கையைவிட்டு ரகசியமாக வெளியேறினார் என டெய்லி மிர்ரர் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை Sri Lanka Guardian தளமும் உறுதிப்படுத்தி உள்ளது.

மாலத்தீவுக்கு பயணம்

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி - மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் மாலதீவுக்கு சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தி இருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

NewsSense தளத்தால் இதனைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

கட்டுநாயக்க விமான நிலையம்

செயலிழந்த கேமிரா

அவர் விமான நிலையத்திற்கு வந்தபோது, விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் அனைத்து பாதுகாப்பு கேமராக்களும் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.

மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்திலிருந்து புறப்பட்ட அவர் UL102 என்ற விமானத்தில் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கேமரா அமைப்பின் கோளாறு குறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?