இந்த கடற்கரையில் மணலே இல்லை - கலிஃபோர்னியாவின் கண்ணாடி கடற்கரை பற்றி தெரியுமா? canva
உலகம்

இந்த கடற்கரையில் மணலே இல்லை - கலிஃபோர்னியாவின் கண்ணாடி கடற்கரை பற்றி தெரியுமா?

Keerthanaa R

இந்த உலகில் நம்மை வியக்கவைக்கும் பலவிதமான கடற்கரைகள் இருக்கின்றன. இரவில் ஒளிரும் கடற்கரை, வானவில் கடற்கரை, மணல், தண்ணீர், பனி என மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும் கடற்கரை என்று ஒவ்வொன்றை பற்றியும் உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

அந்த வகையில், இந்த பதிவில் நாம் பார்க்கவிருப்பது கண்ணாடி கடற்கரை.

கலிபோர்னியாவில் அமைந்திருக்கிறது இந்த கண்ணாடி கடற்கரை. இதற்கு ஏன் கண்ணாடி கடற்கரை என்ற பெயர் வந்தது? கண்ணாடிகள் என்றால், எதை குறிக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்

கதைகளின் படி, 1906ஆம் ஆண்டு, கலிபோர்னியாவின் ஃபோர்ட் பிராக் பகுதியில் வாழ்ந்த மக்கள், இந்த கடற்கரை பகுதியில், கண்ணாடிகள், உலோகங்கள் நிறைந்த குப்பைகளை கொட்டினர்.

சில ஆண்டுகளில், 1943வாக்கில் இந்த இடம் கண்ணாடி குப்பைகளால் நிரம்பியது. இதனால், அருகில் இருந்த மற்றொரு இடத்தில் குப்பைகளை கொட்டத் தொடங்கினர்.

1967அம் ஆண்டு வாக்கில், இதுபோன்று மொத்தம் மூன்று வெவ்வேறு இடங்களில் கண்ணாடிகள் மலை மலையாக குவிந்திருந்தன

இவற்றை சைட் 1, சைட் 2, சைட் 3 என பிரித்தனர்.

இத்தனை நாட்களாக உணராத தங்கள் தவற்றை மக்கள் உணர்ந்தனர். இவ்வாறு குப்பைகள் கொட்டுவது நல்லதல்ல, இது பேராபத்தில் முடியும் என்பதை அறிந்தனர்.

அதிலிருந்து குப்பைகளை அந்த கடற்கரையில் கொட்டுவதில்லை. அந்த பகுதியும் மக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டது.

சில ஆண்டுகளில் கடல் மக்கும் குப்பைகளை உள்வாங்கிக் கொண்டது. உலோகங்களும் கண்ணாடிகளும் மட்டும் கரையில் மிஞ்சியது.

இந்த உலோகங்களை சேகரித்து, மறு சுழற்சி செய்து மக்கள் பயன்படுத்த தொடங்கினர். இப்போது மிஞ்சியுள்ளது கண்ணாடிகள், செராமிக்குகள் மட்டுமே

இங்கு தான் இயற்கை தனது மாயாஜாலத்தை நிகழ்த்தியது. ஆண்டுகள் தொட்டு கடலலைகள் பாறைகளின் மீது படும்போது, அவை மென்மையாகும் அல்லவா?

அதே போல தான், இந்த கண்ணாடிகளும், செராமிக்குகளும் ஆண்டாண்டு காலமாக அலைகளில் நனைந்து, கடல் கண்ணாடிகளாக மாறியது என தகவல்கள் கூறுகின்றன. இவை கண்ணாடி கூழாங்கற்களாக மாறின.

மென்மையான, வண்ணமயமான, கண்கவர் கண்ணாடி கூழாங்கற்கள் தான் இந்த கடற்கரையில் இருக்கிறது.

இதுவே கண்ணாடி கடற்கரை என்ற பெயர் வர காரணமாக அமைந்தது.

ஃபோர்ட் பிராக் பகுதியில் தற்போது இதுபோல மூன்று கண்ணாடி கடற்கரைகள் இருக்கின்றன. இதன் தனித்துவத்தை அறிந்து, பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றினர்.

ஆனால், எப்போதும் போல மனிதன் இயற்கையின் அழகை சுரட ஆரம்பித்தான்.

இங்கு வரும் மக்கள் விளையாடி மகிழ்வதோடு அல்லாமல், இங்கு நிரைந்திருக்கும் கண்ணாடி கூழாங்கற்களை எடுத்து செல்ல தொடங்கினர். இதனால், சைட் 1 கடற்கரை பொழிவிழந்து காட்சியளிக்கிறது.

சைட் 2 மற்றும் சைட் 3யில், இந்த கண்ணாடி கூழாங்கற்களை நாம் காணலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?