Alien Canva
உலகம்

ஏலியன்கள் பூமிக்கு வந்து சென்றதற்கு அமெரிக்காவிடம் ஆதாரம் இருக்கிறதா? - உண்மை என்ன?

NewsSense Editorial Team

சமீபத்தில், அடையாளம் காணப்படாத வான்வழி விஷயங்கள் (UFO) தொடர்பாக அமெரிக்கக் காங்கிரஸ் விசாரணை ஒன்றை நடத்தியது. இது போன்ற விசாரணைகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க விமானப் படையால் ப்ராஜெக்ட் ப்ளூ புக்கின் ஒரு பகுதியாக விசாரிக்கப்பட்டது.

2020 கொரோனா நிவாரண சட்டம் காரணமாக இந்த விஷயத்தில் தற்போதைய விசாரணை நடத்தப்பட்டது. அவ்விசாரணையில் அனைத்து அமெரிக்க உளவு முகமைகளும் அடையாளம் காணப்படாத வான்வழி விஷயங்கள் தொடர்பாக தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த அறிக்கைகள் அனைத்தும் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் சமர்ப்பிக்கப்பட்டன.

சமீபத்தில் நடந்த விசாரணையில், இந்த அடையாளம் காணப்படாத வான்வழி விஷயங்கள் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் அது அனைத்தும் மனிதர்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் என்கிற அடிப்படையிலேயே விவாதிக்கப்பட்டதாக ஸ்க்ரோல் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பூமிக்கு ஏலியன்களின் விமானங்கள் வந்ததாகவோ, பூமியில் மோதியதாகவோ பொதுமக்கள் கொடுத்த வாக்குமூலம் ஏதும் வலு சேர்க்கவில்லை. இதில் சில ரகசியத் தகவல்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையில் காட்டப்பட்ட UFO

அடையாளம் காணப்படாத வான்வழி விஷயங்கள் அனைத்தும் கடற்படை விமானிகளால் படம்பிடிக்கப்பட்ட காணொளிக் காட்சிகளாகக் கிடைத்தன. ஆனால் இதில் ஏலியன்களின் பங்கு இருப்பதை உறுதி செய்ய வலுவான ஆதாரங்கள் தேவை. அந்த ஆதாரங்களை அறிவியல் கண் கொண்டு ஆராய்ந்து உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

இந்த பிரபஞ்சத்தில் எங்கோ நம்மைப் போல ஒரு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறதா என்பது அறிவியல் சமூகத்தை உசுப்பிக் கொண்டிருக்கும் கேள்வி. ஆனால் அந்த கேள்விக்கும் தேடலுக்கும் சரியான ஆதாரம் தான் தேவையான ஒன்றாக இருக்கிறது.

அண்டம் அத்தனை பெரிது

இன்று நாம் தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கிறோம் என்றால் மிகை இல்லை. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கூட, நம்மால் நம் பால்வெளியைக் கூட இன்னும் முழுமையாகப் பரிசோதித்து முடிக்க முடியவில்லை. பால்வெளியைத் தாண்டி, ஒரு பெரிய அண்டமே நமக்காகக் காத்திருக்கிறது.

ஒரு உதாரணத்துக்கு நம் பால்வெளியை உலகில் உள்ள பெருங்கடல் என்று வைத்துக் கொண்டால், நம் அறிவியல் சமூகம் இதுவரை ஒரு பெரிய நீச்சல் குளத்தை மட்டுமே தேடி முடித்துள்ளது என ஸ்க்ரோல் பத்திரிகையின் வலைத்தளத்தில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் கர்டின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரேடியோ ஆஸ்ட்ரானமி துறை பேராசிரியர் ஸ்டீவன் டிங்கே (Steven Tingay).

UFO (Representational)

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நம் ஏலியன்களுக்கான தேடுதலில் ஏலியன்கள் என ஒன்று இருக்கிறதா இல்லையா என்பதே நமக்குத் தெரியாது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் கோடிக்கணக்கான கோள்களில் ஏதோ ஒன்றில் ஏலியன் இருக்கிறது என்றாலும், அது எந்த கோளில் இருக்கிறது எனக் கண்டுபிடிப்பது தான் மீண்டும் அறிவியல் சமூகம் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால்.

இயற்பியல் விதிப்படி, இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மற்ற கோள்களுக்கு சிக்னல் அனுப்புவது மற்றும் பெறுவதே சிரமமாக இருக்கிறது.

ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கிமீ தொலைவைக் கடக்கிறது. ஒளியின் வேகத்தில் மற்ற கோள்களோடு தொடர்பு கொள்ள வேண்டுமானால் கூட, நம் பால்வெளியில் அருகில் இருக்கும் நட்சத்திரத்தோடு தொடர்பு கொள்ளக் கூட நான்கு ஒளியாண்டு காலம் ஆகும்.

உலகப் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விதிப்படி, ஒளியை விட எந்த ஒரு பொருளும் வேகமாகப் பயணிக்காது எனும் போது, நேரடியாக விண்வெளியை எந்திரங்கள் அனுப்பி ஆய்வு செய்வதும் சிரமமானது என்பது புரிகிறது.

Alien

சிக்னல்கள் கூட, தொலைவு அதிகரிக்க அதிகரிக்க வலுவிழந்து போகும் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

எங்கோ தொலை தூரத்தில் ஒரு கோளில் ஏலியன்கள் வாழ்கிறார்கள் என்றால் கூட, அவர்கள் நம் சிக்னல்களைக் கண்டுணர இந்த நடுவில் இருக்கும் தொலைவு சிரமமாக்குகிறது.

அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் டிம் பர்செட், ஏலியன்கள் பூமியில் மோதி தரையிறங்கி இருப்பதாகவும், அதை அமெரிக்க அரசு தரப்பு மூடி மறைப்பதாகவும் கூறியுள்ளார்.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் விமானங்கள் விபத்துக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு 10 லட்சத்தில் ஒரு முறை சாத்தியம் என்கிறது. அப்படி இருக்க, பல ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து நம் பூமி வரை பறந்து வரும் திறனுள்ள விமானங்களை ஏலியன்கள் வைத்திருக்கிறார்கள் என்றால், அதன் தொழில்நுட்பம் நம்மை விட மேம்பட்டதாகத் தானே இருக்க முடியும்?

ஒரு பேச்சுக்கு, இன்று மனிதர்கள் பயன்படுத்தும் விமான தொழில்நுட்பத்தை விட, ஏலியன்களின் விமானம் 100 மடங்கு மேம்பட்ட தொழில்நுட்பம் என்று வைத்துக் கொண்டால், ஏலியன் தொழில்நுட்பம் கொண்ட விமானம் பூமியில் மோதி தரையிறங்கி விபத்து ஏற்பட 100 மில்லியன் முறையில் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.

ஆக, ஏலியன் விமானம் பூமியில் 100 மில்லியன் முறையாவது தரையிறங்கி இருக்க வேண்டும். அப்படி என்றால் நாள் ஒன்றுக்கு 2,739 முறை என 100 ஆண்டுகளுக்குத் தினமும் ஏலியன்கள் பூமியில் தங்கள் விமானத்தைத் தரையிறக்கி இருக்க வேண்டும்.

இப்படி சகட்டு மேனிக்கு ஏலியன்கள் தங்களின் விமானத்தைப் பூமிக்குள் கொண்டு வரும் போது, வானத்தை அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு சலித்துக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், தங்களிடம் இருக்கும் பொருளை வைத்து வானியல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், இணையம், நெட்டிசன்கள் என எவர் கண்களுக்கும் படாமல் ஏலியன்களால் தரையிறங்கி மீண்டும் வானத்தில் பறந்து சென்றுவிட முடியுமா? இந்நேரத்துக்கு நிச்சயம் ஏதாவது ஒரு குறைந்தபட்ச ஆதாரமாவது கிடைத்திருக்க வேண்டுமே?

அறிவியல்பூர்வமாக ஏலியன்கள் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் கிடைக்காத வரை, ஏலியன்கள் பூமிக்கு வந்திறங்கவில்லை என வைத்துக் கொள்வோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?