ஹேக்கருக்கு ரூ. 2 கோடி அனுப்பிய கூகுள் நிறுவனம் ஹேக்கருக்கு ரூ. 2 கோடி அனுப்பிய கூகுள் நிறுவனம்
உலகம்

ஹேக்கருக்கு ரூ.2 கோடி அனுப்பிய கூகுள் நிறுவனம் - ஓஹோ இதுதான் காரணமா?

Keerthanaa R

தவறுதலாக ஹேக்கர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு 2 கோடி ரூபாயை அனுப்பியுள்ளது கூகுள் நிறுவனம். சுமார் மூன்று வாரங்களுக்கும் மேலாக நிறுவனம் சார்ந்த யாரும் இந்த பண பரிவர்த்தனை குறித்து தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சைபர் செக்யூரிட்டி நிபுணராக வேலை பார்ப்பவர் சாம் கர்ரி. சில நாட்களுக்கு முன் இவரது வங்கி கணக்கிற்கு 250 ஆயிரம் டாலர்கள் கிரெடிட் ஆகியுள்ளது. இந்திய மதிப்பில் கிட்ட தட்ட 2 கோடி. 

இவ்வளவு பெரிய தொகையை பார்த்த சாம், சந்தோஷப்பட்டாலும் அதனை செலவழிக்கும் எண்ணத்தில் இல்லை. இதுபோன்று தவறுதலாக நிறைய பண பரிவர்த்தனைகள் நடப்பது சாதாரணமாகிவிட்டதால், பணம் கணக்கிற்கு வந்து வெகு நாட்கள் ஆகியும்  சொந்த காரியங்களுக்காக அவர் பயன்படுத்தவில்லை. 

இந்த பெரும்தொகை அவரது கணக்கிற்கு வந்தது கூகுள் நிறுவனத்திடமிருந்து!

இந்த சம்பவம் நிகழ்ந்து மூன்று வாரங்கள் ஆகியும் சாமை கூகுள் நிறுவனமோ சம்பந்தப்பட்டவர்களோ தொடர்பு கொள்ளவில்லை. இதனை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "நான் கூகுளை தொடர்புகொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா?" எனக் கேட்டிருந்தார். கூடவே உங்களுக்கு வேண்டாம் என்றாலும் எனக்கு பிரச்னை இல்லை என நகைச்சுவையாகவும் குறிப்பிட்டிருந்தார். 

யுகா லேப்ஸில் பாதுகாப்பு பொறியாளரான கர்ரி, சில நேரங்களில் கூகுள், மற்றும் இதர தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனகளுக்கு மென்பொருளில் பாதிப்புகளைக் கண்டறிய உதவியுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் இதுவரை இவ்வளவு பெரிய தொகையை பெற்றதில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

உரிமை கோரப்படாமலேயே பணம் தன்னிடம் இருந்தாலும், நிறுவனத்திலிருந்து பதில் ஏதேனும் வரும் என்று காத்திருந்துள்ளார் சாம். ஒருவேளை யாரும் உரிமை கோரவில்லை என்றால், வரி சார்ந்த குழப்பங்களை தவிர்க்க வேறு கணக்கிற்கு மாற்ற தயாராக இருந்ததையும் கூறினார்.

Google

இறுதியில், கூகுள் நிறுவனம் சாமை தொடர்பு கொண்டு, தற்செயலாக ரூ.2 கோடியை அவருக்கு மாற்றியதாக தெரிவித்தது. 'மனித தவறினால்’ (Human error) வேறு ஒருவருக்கு அனுப்பப்படவேண்டிய தொகையை சாம் கணக்கிற்கு அனுப்பியதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

தொகையை பெற்ற நபர் எங்களை துரிதமாக தொடர்புகொண்டுள்ளார். இந்த தவறை சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த வெள்ளிகிழமை அன்று சாமை தொடர்புகொண்டுள்ளது கூகுள். தற்போது பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக வங்கிக்கு செல்லப் போவதாக சாம் தெரிவித்தார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?