கோத்தபய ராஜபக்சே  Twitter
உலகம்

தகிக்கும் இலங்கை : "மக்கள் அமைதிகாக்க வேண்டும்" ட்விட்டரில் கதறும் ராஜபக்சே

Antony Ajay R

இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியிருக்கிறார். அவரது உடமைகள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போராட்டக்காரர்கள் அமைதியைக் காக்க வேண்டும் என்று இராணுவம் கூறி வருகிறது. எனினும் போராட்டத்தின் சூடு குறைந்த பாடில்லை. மக்கள் பொது மற்றும் தனியாரின் சொத்துக்களை அழிக்காமல் அமைதியாகப் போராட வேண்டும் என்று கூறியிருக்கிறார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா.

இதற்கிடையில் ராஜபக்சே சகோதரர்களின் ஆதரவாளர்கள் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்துக்கு நெருக்கமான பலர் நாட்டை காலி செய்துவிட்டு தப்பி ஓடுகின்றனர். இந்த நிலையில் நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்சே ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டில், "மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறேன். வன்முறை மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை கை விடுங்கள்.

அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு ஒருமித்த கருத்துக்களுடன் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?