Travel: மியான்மரில் அமைந்திருக்கும் Pindaya Caves - இந்த புத்த குகைக் கோவில் ஏன் சிறப்பு? Twitter
உலகம்

Travel: மியான்மரில் அமைந்திருக்கும் Pindaya Caves - இந்த புத்த குகைக் கோவில் ஏன் சிறப்பு?

Keerthanaa R

உலகின் பல்வேறு இடங்களில் குகைக் கோவில்கள் அமைந்துள்ளன. இவை இந்து, பௌத்தம் போன்ற மதங்களை பறைச்சாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குகைக்கோவில்கள் காடுகளுக்கு மத்தியிலும், சிலவை பூமிக்கு அடியிலும் என செல்லும் வழியே சவாலானதாக இருக்கிறது. இருப்பினும் மனிதர்கள் செல்லக் கூடிய அளவு வசதிகளை, உள்கட்டமைப்புகளை செய்துள்ளனர். சில குகைக்கோவில்களுக்கு வரலாற்று சிறப்புகளும் உள்ளன.

அதில் ஒன்று தான் இந்த பிண்டாயா குகைகள். இதன் சிறப்பு என்ன? எங்கே இருக்கின்றன இந்த குகைகள்?

பர்மாவின் மைலெட் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த குகைகள். சுண்ணாம்பு கற்களால் ஆன இந்த பிண்டாயா குகைகள் தானு இன மக்களின் தாயகமாக விளங்கியது என கூறப்படுகிறது

இங்கு பௌத்தரின் சிலைகள், கோவில்கள் உள்ளன. சமீப காலமாக பிரபலமடைந்து வரும் இந்த இடத்திற்கு பௌத்த சன்னியாசிகள், சாதுக்கள் தவிர சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

மைலெட் பகுதியின் மலைகளில் மொத்தம் மூன்று குகைகள் உள்ளன. அதில் தெற்கு பகுதியில் உள்ள குகைகளுக்கு மனிதர்கள் செல்லலாம்

இந்த தெற்கு பகுதி குகைகள் சுமார் 490 மீ நீள்கிறது. இங்கு பழமையான சுமார் 8000 புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை சென்று நாம் வழிபடலாம்.

இந்த சிலைகளில் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது கொன்பாங் காலத்தின் முற்பகுதியின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன

இந்த சிலைகளில் சமீபத்திய புத்தர் சிலை 1733ஆம் ஆண்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு சில புத்தர் சிலைகளில் கல்வெட்டுகள் இல்லை என்றாலும் இந்த சிலைகள் எதுவும் 18ஆம் நூற்றாண்டை விட பழமையானதாக இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

மேலும், 18ஆம் நூற்றாண்டு தொடங்கி அதன் பிறகே மெல்ல இந்த புத்தர் சிலைகள் இங்கு வைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

பழங்காலத்து புத்தர் சிலை தொடங்கி, மாடர்னான புத்த சிலைகளும் இங்கு காணமுடிகிறது

அமரபுர புத்தர் சிலைகள், மாண்டலே புத்தர் சிலைகள், ராக்கைன் புத்தர் சிலைகள், மோன் புத்தர் சிலைகள் போன்ற பர்மிய புத்தர் சிலைகள் இங்கு காணலாம். இந்த புத்தர் சிலைகளின் தொகுப்பு கலை மற்றும் கலாச்சார ஆர்வலர்களை பிண்டயா குகைக்கு ஈர்க்கிறது.

இந்த தெற்கு குகையின் நுழைவு வாயிலில் ஒரு பகோடா கோபுரம் ஒன்று உள்ளது. இதன் பெயர் ஷவே யூ மின் பகோடா, அல்லது கோல்டன் கேவ் பகோடா. இது 15 மீட்டர் உயரம் உள்ளது. மேலும் இதனை மாமன்னர் அசோகர் கட்டியெழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நுழைவு வாயிலில் ஒரு ராட்சத வெண்கல மணியும் உள்ளது. இதன் எடை சுமார் 654 கிலோ.

பௌத்த மதத்தினை பின்பற்றுபவர்கள் மட்டுமல்லாது பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது இந்த பிண்டாயா குகை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?