ரிஷி சுனக்
ரிஷி சுனக் Twitter
உலகம்

ரிஷி சுனக் : பிரிட்டன் பிரதமர் ஆவாரா இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மருமகன்?

Gautham

சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தைக் கொண்ட பிரிட்டனின் மிகப்பெரிய மற்றும் வளம் கொழிக்கும் காலனி நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

மகாத்மா காந்தி முதல் சுபாஷ் சந்திரபோஸ் வரை பல தலைவர்கள் பல வழிகளில் இந்தியாவைப் பிரிட்டனிடமிருந்து மீட்கப் போராடி, 1947ஆம் ஆண்டு நம் நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர்.

இன்று இந்தியர்கள் மெல்ல உலகின் பல துறைகளில் மிளிரத் தொடங்கியுள்ளனர். வையத் தலைமை கொள்ளத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவின் துணை அதிபர் (முதல் பெண் துணை அதிபர் என்பது கூடுதல் பெருமை) கமலா ஹாரிஸ் கூட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது இங்குக் குறிப்பிடப்பட்டது.

என்னதான் அமெரிக்காவில் அரசியல் உயர் பதவிகளை வகித்தாலும், இந்தியாவைப் பல நூற்றாண்டுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்சி செய்த பிரிட்டனின் பிரதமராக ஓர் இந்தியர் தேர்வு செய்யப்பட்டால், அது இந்தியர்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயமாக இருக்கும்.

பிரிட்டன் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுக்குக்கு வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பிரிட்டனில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். அதற்கான காரணங்களை கீழ் கொடுத்திருக்கும் இணைப்பில் படிக்கலாம்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா: அவரது வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்கள்

அடுத்து யார் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு வருவது என, கன்சர்வேடிவ் கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை முதல் சுற்று வாக்குப்பதிவில் 88 பேர் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அவரைத் தொடர்ந்து முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலர் பென்னி மோர்டான்ட்க்கு 67 பேர் வாக்களித்திருக்கிறார்கள். வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த லிஸ் ஸ்ட்ராஸ் 50 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

போரிஸ் ஜான்சனோடு போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் ஜெரிமி ஹன்ட் மற்றும் தற்போது பிரிட்டனின் நிதி அமைச்சராக இருக்கும் நதீம் சஹாவி ஆகியோர் போதிய வாக்குகளின்றி போட்டியிலிருந்து வெளியேறினர்.

இரண்டாம் சுற்றில் ரிஷி சுனக் 101 வாக்குகளையும், பென்னி மோர்டான்ட் 83 வாக்குகளையும், லிஸ் ஸ்ட்ராஸ் 64 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Boris Johnson

பொதுமக்கள் மற்றும் என்னோடு பணியாற்றிய அரசியல் நண்பர்களின் தொடர் ஆதரவு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. என் எல்லாவற்றையும் இந்த நாட்டின் சேவைக்கு அளிக்க நான் தயாராக இருக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவோம். நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைப்போம், மீண்டும் நாட்டை ஒன்றுபடுத்துவோம் என ரிஷி சுனக் கூறியதாக வியான் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜூலை 21ஆம் தேதிக்குள் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள 358 கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் இரு தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு 2 லட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள், அந்த இருவரில் ஒருவரைத் தேர்வு செய்வர். அவரே கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டனின் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவார்.

கிறிஸ் ஃபின்சர் விவகாரத்தை முன்னிட்டு, தன் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த ரிஷி சுனக், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தது, பிரிட்டன் பொருளாதாரம், பிரெக்ஸிட் குறித்த ஆழமான புரிதல் இருப்பது போன்ற காரணங்களால் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகப் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இவருடைய மனைவி அக்‌ஷதா மூர்த்தி, இந்தியாவின் பிரபல ஐடி தொழிலதிபர் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?