Volodymyr Zelenskyy - Bear Grylls இன்ஸ்டாகிராம்
உலகம்

Ukraine: ”உறுதியோடு இருங்கள்" அதிபர் செலென்ஸ்கியை சந்தித்த Bear Grylls - என்ன காரணம்?

Keerthanaa R

உக்ரைன் நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியும், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸும் சந்தித்துள்ளனர்.

நிகழ்ச்சி ஒன்றிற்காக சந்தித்துக்கொண்ட இருவரும், பல விஷயங்கள் குறித்து விவாதித்ததாக பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. தற்போது வரை தொடர்ந்துக்கொண்டிருக்கும் இந்த போரில் உக்ரைன் நாட்டு அதிபர் உட்பட அனைவரும் போர் புரிந்துக்கொண்டிருக்கின்றனர்.

உக்ரைனின் நான்கு நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா அவற்றை தன்னுடன் இணைக்கொண்டுள்ளது.

தேவை ஏற்பட்டால் அணு ஆயுதங்களையும் பயன்படுத்த தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் அதிபரை நிகழ்ச்சி ஒன்றிற்காக நேரில் சந்தித்திருக்கிறார் பியர் கிரில்ஸ். உக்ரைன் தலைநகர் கீவில் இவர்களது சந்திப்பு தீவிர பாதுகாப்புடன் நடந்தேறியது.

இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரில்ஸ் பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் உக்ரைன் தலைநகர் கீவில் அதிபர் செலன்ஸ்கியை சந்திக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாகவும், தன் வாழ்வில் இதுவரை கிடைக்காத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

“பனிக்காலம் தொடங்கவுள்ள நிலையில், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்தியில் மக்கள் குளிரில் வாழ்வது போராட்டமாக இருக்கும்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் செலன்ஸ்கியின் இன்னொரு பக்கத்தை உலகம் பார்க்கும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இவ்வனைத்தையும் அதிபர் எப்படி கையாண்டு வருகிறார் என தெரிந்துகொள்ள பியர் கிரில்ஸ் விரும்பியதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், தான் நினைத்ததை விட அதிகமாக அவரை பற்றி தெரிந்துக்கொண்டதாகவும் கிரில்ஸ் தெரிவித்தார். உக்ரைன் அதிபரையும், நாட்டு மக்களையும் உறுதியோடு இருக்கும்படியும் தன் பதிவில் கிரில்ஸ் கூறியிருக்கிறார்

விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் போர்

பியர் கிரில்ஸ் செலன்ஸ்கியின் சந்திப்பு பலரது கவனத்தை பெற்றுள்ளது. கடினமான சூழ்நிலைகளில் உலகம் தங்களை நினைவில் வைத்திருப்பது ஆறுதலாகவும், பக்கபலமாகவும் இருப்பதாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதினுடன் பேச தயாராக இருப்பதாக பிரான்ஸில் நடந்த கூட்டு மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். கடந்த பத்து மாதங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக பைடன் புதினுடன் பேச தயார் எனக் கூறியுள்ளது, தற்போது பேசு பொருளாகியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?