கல்வி, விளையாட்டு, வேலை, மருத்துவம்: பெண்களை முடக்கும் தாலிபான் - என்ன நடக்கிறது அங்கே?  ட்விட்டர்
உலகம்

தாலிபான்: ”ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சை பெறக் கூடாது” அரசு அதிரடி உத்தரவு!

Keerthanaa R

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு எந்த ஆண் மருத்துவரும் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்ககூடாது, மற்றும் பெண்கள் ஆண் மருத்துவர்களை பார்க்ககூடாது என புதிய சட்டத்தை விதித்துள்ளது தாலிபான் அரசு.

கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டது ஆப்கானிஸ்தான். அப்போது முதல் பல்வேறு கடுமையான கட்டுப்படுகளை விதித்து வருகிறது தாலிபான் அரசு. இந்த கட்டுப்பாடுகள் முக்கியமாக பெண்களை, அவர்களது சுதந்திரத்தை முடக்குவதாக உள்ளது.

செப்டம்பர் 2021 முதல் மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை பெண்கள் கல்லூரிகளுக்கு திரும்பக் கூடாது எனக் கூறி, தற்போது பெண்களுக்கு படிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், மற்றும் கல்வித்துறையை தவிர்த்து மற்ற எல்லாத் துறைகளிலிருந்தும் பெண்கள் வேலையிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டனர்.

ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியில் செல்ல அனுமதியில்லை, விமான பயணங்கள் மேற்கொள்ளக் கூடாது, கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது ஆப்கான் பெண்கள் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடவே, பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு ஆண் மருத்துவரும் பெண்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் கட்டமாக பால்க் மாகாணத்தில் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெண் மருத்துவர்களிடம் மட்டுமே பெண்கள் சிகிச்சை பெற வேண்டும்.

அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தாலிபான் அரசின் பொது விவகாரங்கள் மற்றும் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம் தனது உத்தரவில் இதனைக் கூறியுள்ளது

இதை தவிர, பெண்களுக்கான அழகு நிலையங்களை மூடவும், அழகு நிலையங்களின் இடங்களை பெண்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக, தி மினிட் மிரர் பத்திரிகை கூறுகிறது

இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அரசு சாரா நிறுவனங்களிலும் பெண்களை பணியமர்த்தக் கூடாது எனவும், மால்களில் பெண்கள் பணியாற்றக் கூடாது எனவும், தாலிபான் அமைப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பெண்களுக்கு கல்வி தடை செய்யப்பட்ட நிலையில், பெண் மருத்துவர்களும் இனி வரும் காலங்களில் இருக்கமாட்டார்கள். இது பெண் பாலினத்தையே வேறோடு அழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பை தெரிவித்துவந்தாலும், சற்றும் சளைத்துவிடாமல் தங்களது கொள்கைகளை கைவிடமாட்டேன் என்கிறது தாலிபான் அரசு.

உலக நாடுகள் முன்னேறி பெண்களின் ஆட்சியில் சிறந்துவிளங்கிக் கொண்டிருக்கும் தருவாயில், தாலிபானின் இந்த பிற்போக்கு விதிமுறைகள், மீண்டும் பெண் சுதந்திரத்தை முடக்குவதாக இருக்கின்றன!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?