பூட்டான் 'மகிழ்ச்சியின் நாடு' என்று அழைக்க என்ன காரணம்?
பூட்டான் 'மகிழ்ச்சியின் நாடு' என்று அழைக்க என்ன காரணம்? Canva
உலகம்

பூட்டான் 'மகிழ்ச்சியின் நாடு' என்று அழைக்க என்ன காரணம்?

Priyadharshini R

கிழக்கு இமயமலையில் அமைந்துள்ள பூட்டான் அதன் இயற்கைக்காட்சிகள் மற்றும் வளமான கலாச்சாரத்திற்கு புகழ் பெற்றது. இது 'மகிழ்ச்சியின் நிலம்' என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வளவு நாடுகள் இருப்பின் பூட்டானை 'மகிழ்ச்சியான் நாடு' என்று போற்றப்படுவதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

கிராஸ் நேஷனல் ஹேப்பினஸ் (GNH)

கிராஸ் நேஷனல் ஹேப்பினஸ் கமிஷனின் கருத்துப்படி பூட்டான், பொருளாதார காரணிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் உளவியல் நல்வாழ்வு, சுகாதாரம், கல்வி, நேரப் பயன்பாடு, கலாச்சார பன்முகத்தன்மை, நல்ல நிர்வாகம், நகர்ப்புற உயிர்சக்தி ( இடங்களின் தரம்) , சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றிலும் பங்கு வகுக்கிறது.

கலாச்சார மதிப்பு

பூட்டான் அதன் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

பூட்டானிய மக்கள் தங்கள் தனிப்பட்ட பாரம்பரியங்களில் பெருமிதம் கொள்கிறார்கள். அவை அன்றாட வாழ்க்கையிலும் உள்ளது.

இரக்கம், அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதை என கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது தான், நாட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியின் உணர்விற்கு பங்களிக்கிறது.

இயற்கையோடு இணக்கம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பூட்டானின் அர்ப்பணிப்பு, மகிழ்ச்சியான நாடு என்பதற்கு மற்றொரு முக்கிய காரணியாகும்.

பூட்டான் மக்கள் சுற்றுச்சூழலுக்கும் நல்வாழ்வுக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்ந்து இயற்கையோடு இயைந்து வாழ்வதை விரும்புகிறார்கள்.

பசுமையான நிலப்பரப்புகள், தூய்மையான காற்று மற்றும் ஏராளமான பல்லுயிர் பெருக்கம் ஆகியவை மகிழ்ச்சியை வளர்க்கும் என நம்புகிறார்கள்.

வாழ்க்கை முறை

பூட்டான் மக்கள் பாரம்பரிய பண்டிகைகள், மத விழாக்கள் மற்றும் சமூகப் பணிகளில் துடிப்பாக ஈடுபடுகின்றனர். இந்த சமூகக் கட்டமைப்பானது, சமூகத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறையை உருவாக்குகிறது.

ஆன்மீகம்

பூட்டானில் பௌத்த தத்துவம் நிரம்பி உள்ளது. ஆன்மீகம் அந்த நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அமைதி, இரக்கத்தைப் பின்தொடர்வது ஒரு மத நடைமுறையாக மட்டுமல்லாமல், ஒரு வாழ்க்கை முறையாக கருதுக்கின்றனர்.

பூட்டான் மக்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு பங்களிக்கும் தனித்துவமான கலாச்சார அடையாளத்தையும் மதிப்புகளையும் பாதுகாப்பதை அந்த நாட்டின் நோக்கமாக உள்ளது. என்னதான் தனித்துவமாக இருந்தாலும், நவீனத்துவத்தின் சிந்தனை மற்றும் ஒருங்கிணைப்பை குறிப்பிடத்தக்க மட்டுமே அனுமதிக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?