Marina Chapman ட்விட்டர்
உலகம்

Marina Chapman: 10 வருடங்களாக குரங்குகளோடு காட்டில் வளர்ந்த பெண் - மனதை உலுக்கும் கதை!

Keerthanaa R

5 வயதில் கடத்தப்பட்ட பெண் தனது 14 வயது வரை குரங்குகளால் வளர்க்கப்பட்ட கதையை பகிர்ந்துள்ளார்.

ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மௌக்லி குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். காட்டில் வளர்ந்த டார்சன், வன விலங்குகளால் வளர்க்கப்பட்ட குழந்தைகள் குறித்த கதைகள் அவ்வப்போது வெளியாகி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

ஓநாய்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள் பற்றி படிக்க...

அப்படி, தனது 5 வயது முதல் 14 வயது வரை காட்டில் குரங்குகளால் வளர்க்கப்பட்டுள்ளார். அவரது கதை பலரையும் மிரள வைத்துள்ளது

மரினா சாப்மேன் என்ற பெண் கொலம்பியாவில் பிறந்து வளர்ந்தார். அவருக்கு 5 வயது இருக்கும்போது முகம் தெரியாத இருவரால் கடத்தப்பட்டார் மரினா.

LADbible என்ற தளத்திற்கு இவர் அளித்த பேட்டியில், தன்னை கடத்திய இருவருடைய கால்களை மட்டுமே அவர் பார்த்ததாக குறிப்பிடுகிறார். ஒருவரது கால் கருப்பாக இருந்தது எனவும் ஒருவர் வெள்ளையாக இருந்தார் எனவும் மரினா நினைவுக்கூருகிறார்.

மரினாவை கடத்தியவர்கள் அவரை வீட்டிலிருந்து வெகு தூரமாக கூட்டி சென்று காட்டுக்குள் விட்டு சென்றுவிட்டனர்.

“என்னை திரும்ப அழைத்து செல்லுங்கள், தனியே விட்டு செல்லாதீர்கள்” என்ற அவரது கூக்குரல் யாருக்கும் கேட்கவே இல்லை.

காட்டுக்குள் தனித்துவிடப்பட்ட பிறகு, என்ன செய்வது எங்கே போவது என்று தெரியாமல் தவித்தாள் வெறும் 5 வயதே ஆன மரினா.

”முதலில் ஒரு குரங்கு வந்து என்னை தொட்டுப் பார்த்தது. அப்போது மிகவும் பயமாக இருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் இன்னும் சில குரங்குகள் வந்துவிட்டன. அப்போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் உள்ளுர பயம் இன்னும் இருந்தது உண்மைதான்” என்று பயத்துடன் நினைவுக்கூருகிறார் மரினா.

தன்னைக் காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை. தன்னால் அங்கிருந்து தனியாக தப்பித்து, உயிர்பிழைத்து வெளியில் செல்ல முடியாது. இனி தன் வாழ்க்கை அங்கு தான் என எப்படியோ தெரிந்திருந்தது அந்த குழந்தைக்கு.

மெல்ல குரங்குகளிடம் பேசக் கற்றுக்கொண்டாள். முதலில் விலங்குகள் அவளை ஏற்க மறுத்தன எனவும், பின்னர் தன்னை ஏற்றுக்கொண்டதாகவும் கூறும் மரினா, அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு பாஷை உருவானது என்பதையும் குறிப்பிடுகிறார். அப்படியே, வனத்தில் இருக்கும் மற்ற விலங்குகளுடனும் ஒன்றிப்போனார் மரினா.

காபுசின் வகை குரங்குள் தான் மரினாவை வளர்த்தன. இப்படி தன் 14 வயது வரை காட்டில் தான் வளர்ந்தார் மரினா. 14 வயது இருக்கும்போது தன் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் அவரை மீட்டதாகவும், பின்னர் ஒரு பெண் தன்னை தத்தெடுத்து வளர்த்ததாகவும் கூறினார்.

இவர் கடத்தப்பட்ட காரணம் மர்மமாகவே இருக்கிறது. காட்டிற்கு தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்துவரும் மரினா, தன் கதையை புத்தகமாக வெளியிட்டார்.

"The Girl With No Name" என்ர பெயரில் அந்த புத்தகம் வெளியானது. இதற்கு அவரது மகள் வெனெசா உதவியுள்ளார். நேஷனல் ஜியோகிராஃபி சேனலில், இப்வரது கதை “வுமன் ரெய்ஸ்டு பை மங்கிஸ்” என்ற தலைப்பில் ஆவணப்படமாகவும் வெளியாகியிருந்தது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?