New york Twitter
உலகம்

நியூயார்க் : மர்ம நபர்களால் தாக்கப்பட்ட 2 சீக்கியர்கள் - என்ன நடந்தது?

Priyadharshini R

நியூயார்க் நகரின் ரிச்மண்ட் ஹில்ஸ் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் சீக்கியர் ஒருவரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். அதே பகுதியில் இன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சிக்கியர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதையடுத்து, நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் புரூக்ளின் சுரங்கப்பாதை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தன்று இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு மர்மநபர்கள் சீக்கியர்கள் இரண்டு பேரின் தலைப்பாகைகளை கழற்ற வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம், காவல்துறையினரை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?