ரஷ்யா: கிறிஸ்துமஸை ஒரு வாரம் முன்னரே கொண்டாடிய உக்ரைன் மக்கள் - என்ன காரணம்?
ரஷ்யா: கிறிஸ்துமஸை ஒரு வாரம் முன்னரே கொண்டாடிய உக்ரைன் மக்கள் - என்ன காரணம்? canva
உலகம்

ரஷ்யா: கிறிஸ்துமஸை ஒரு வாரம் முன்னரே கொண்டாடிய உக்ரைன் மக்கள் - என்ன காரணம்?

Keerthanaa R

வழக்கமாக ஜனவரி 7 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் உக்ரைன் மக்கள், இந்த வருடம் ஒரு வாரத்திற்கு முன்பாக, டிசம்பர் 25ஆம் தேதியே கொண்டாடியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. 10 மாதங்களை எட்டியும் போர் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது. உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக இருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.

ரஷ்ய படைகள் தாக்குதலில் உக்ரைன் நாட்டு மக்கள் ஏராளமானோர் உயிர் நீத்தனர். இதனால், ரஷ்யாவுடனான எந்த வித தொடர்பும் தங்களுக்கு வேண்டாம் என உக்ரைன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி உக்ரைன் மக்கள் சிலர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

வழக்கமாக ரஷ்யாவுடன் இணைந்து, ஜனவரி 7 ஆம் தேதி தான் உக்ரைனிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும்.

அஸ்ஸோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின் படி, ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஆஃப் உக்ரைனின் தலைமை, டிசம்பர் மாதத்தில் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட கடந்த அக்டோபர் மாதமே அனுமதி வழங்கியதாக தெரிவிக்கிறது.

மேலும் அந்த செய்தி அறிக்கையில், "இந்த தேதி மாற்றம் என்பது, உக்ரைனியர்களுக்கு, ரஷ்யாவுடனான தொடர்பை அவர்கள் துண்டித்துக்கொண்டதன் அடையாளம்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பிப்ரவரி 24ல் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு, ஒரு எழுச்சி மற்றும் புரிதலின் குறியீடு. அதாவது, இனி எப்போதும் நாங்கள் ரஷ்ய உலகின் ஒரு அங்கமாக இருக்கமாட்டோம் என்பதை அது குறிக்கிறது" என்று ஒலினா பலீ என்ற உக்ரைன் நாட்டு பெண் ஒருவர் அஸ்ஸோசியேட்டட் பிர்ஸ்ஸிடம் தெரிவித்திருக்கிறார்.

தவிர, உக்ரைனின் பாப்ரிட்சியா நகரத்தில் இந்த தேதி மாற்றத்திற்கான வாக்கெடுப்பு நடந்துள்ளது. அதில் 204 பேரில் 200 பேர் டிசம்பர் 25 அன்று கிறிஸ்டுமஸ் கொண்டாட சம்மதம் தெரிவித்து வாக்களித்திருந்ததாக செய்தி அறிக்கை கூறுகிறது.

இது உக்ரைன் வரலாற்றிலேயே மிக முக்கியமான, மிக பெரிய மாற்றம் என பாப்ரிட்சியா நகரவாசிகள் கூறுகின்றனர்

உக்ரைனின் கெர்சன் பகுதியை ரஷ்யா கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் அந்நகரை சமீபத்தில் மீட்டது.

அங்கிருந்து வெளியேறிய ரஷ்ய துருப்புகள், கிறிஸ்துமஸ் நாளான நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசியதில், உயிரிழப்புகள் 10 ஆக உயர்ந்துள்ளது எனவும், காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 50ஐ தொட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்கியதில், ஊர் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருவதாக அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?