America Twitter
உலகம்

ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் குறித்த தகவல்களுக்கு 1 கோடி டாலர்கள் - அமெரிக்கா அறிவிப்பு

Priyadharshini R

உக்ரைன் ரஷ்ய இடையேயான போர் இன்னும் ஓயாத நிலையில்,அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்ய ராணுவ உளவுத்துறை செயல்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது.


இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்கா, ரஷ்ய இராணுவ உளவுத்துறை அதிகாரிகளை அடையாளம் காட்டுவது அல்லது அவர்கள் குறித்த தகவல்களைத் துப்பு கொடுத்தால் 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மற்ற நாட்டு அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவின் முக்கியமான உள்கட்டமைப்பிற்கு எதிராகச் சதியில் ஈடுபடும் நபரின் அடையாளம் அல்லது அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவுக்கு எதிராக குற்றவியல் சதியில் பங்கேற்றதாகக் கூறப்படும் ரஷ்யாவை சேர்ந்த யூரி செர்ஜியேவிச் ஆண்ட்ரியென்கோ, செர்ஜி விளாடிமிரோவிச் டெடிஸ்டோவ், பாவெல் வலேரிவிச் ஃப்ரோலோவ், அனடோலி செர்ஜியேவிச் கோவலேவ், ஆர்டெம் வலேரிவிச் ஓச்சிச்சென்கோ மற்றும் பீட்ர் நிகோலாயெவிச் பிளிஸ்கின் என்ற 6 பேர் குறித்த தகவல்களைக் குறிப்பாகத் தேடுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?