குழந்தைகளுக்கு ஏன் கண்ணாடி காட்ட கூடாது? உலக நாடுகளில் இருக்கும் சடங்குகளும் பின்னணியும் canva
உலகம்

குழந்தைகளுக்கு ஏன் கண்ணாடி காட்ட கூடாது? உலக நாடுகளில் இருக்கும் சடங்குகளும் பின்னணியும்

Keerthanaa R

ஒவ்வொரு நாட்டிலும், வீட்டிலும் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற விஷயங்களில் பின்பற்றப்படும் சடங்குகள் மாறுபடுகின்றன.

பிறந்த குழந்தைக்கு கண்ணாடி காட்டக்கூடாது, குழந்தையின் தொட்டிலில் நாம் உட்கார கூடாது என்று. இவற்றுக்கெல்லாம் அறிவியல், உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கும்.

இது போல உலக நாடுகளில் குழந்தைகளை வைத்து பின்பற்றப்படும் விநோதமான சடங்குகள் என்னென்ன? இந்த பதிவில் காணலாம்...

கண்ணாடி பார்க்ககூடாது

க்ரீஸ் நாட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு ஞானஸ்நானம் செய்து வைக்கும் வரை கண்ணாடி பார்க்கக்கூடாது. அதே போல குழந்தையின் தாய் அதனுடைய துணிகளை துவைக்கவும் அனுமதி இல்லை.

இதுவெல்லாம் செய்தால் கெட்ட சக்தி வந்து குழந்தையை பிடித்துக்கொள்ளும் என்பது அவர்களது நம்பிக்கை.

ஒரு விதத்தில் இந்த சடங்கு இந்தியாவுடனும் ஒத்துப்போகிறது தான். குழந்தைகள் குறைந்தது ஒரு வயதை அடையும் வரை கண்ணாடி பார்க்க வைப்பதில்லை.

குழந்தை, திடீரென தனது பிம்பத்தை பார்த்து பயந்துவிடக் கூடாது என்பது தான் இதன் பின்னணி.

வீட்டிற்குள் 40 நாட்கள்

அர்மேனியா நாட்டில் குழந்தை பிறந்தால் 40 நாட்களுக்கு அதனை வெளியில் கூட்டிச் செல்ல மாட்டார்கள். யார் குழந்தையை பார்க்க விரும்பினாலும் வீட்டிற்கு சென்று தான் பார்க்கவேண்டும்

40 நாட்களுக்கு பிறகு சர்ச்சிற்கு கூட்டி சென்று க்றிஸ்டினிங் செய்வார்கள்.

இலை எரித்தல்

ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறந்தவுடன் அதற்கு ஞானஸ்நானம் செய்துவிடுவார்கள். இதை தவிர, குழந்தை தாய் மற்றும் பாட்டி ஆகியோர் பிரத்தியேகமான சில இலைகளை எரிக்கும் சடங்கு ஒன்று நடைபெறுகிறது. இதிலிருந்து வெளிவரும் புகைக்கு அருகில் குழந்தையை வைக்கின்றனர்.

குழந்தையின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த சடங்கு பின்பற்றப்படுகிறது.

Potty டிரெய்னிங்

சீனா தொட்ட தொடக்கம் முதல் எல்லாவற்றிலும் கொஞ்சம் அட்வான்ஸ் ஆக தான் இருக்கிறது.

இங்கு பிறக்கும் குழந்தைகள் ஒரு வயதை பூர்த்தி செய்யும் முன்னரே அவர்களுக்கு potty training வழங்கப்படுகிறது. அதாவது தனியாக மலம் கழிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக விசில் அடிப்பது, பாட்டு பாடுவது போன்ற டிரெயினிங் மெத்தடுகளை பின்பற்றுகின்றனர்.

உறையும் பனி

ஐஸ்லாந்தில் பிறந்த குழந்தையை உறைக்கும் பனியில் தூங்க வைக்கின்றனர். இது குழந்தைகளின் ஆயுளை நீட்டிக்க உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

குழந்தையை தாண்டுதல்

ஸ்பெயினில் ஆண்டுதோறும் கார்பஸ் கிறிஸ்ட்டி என்ற விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது கைக்குழந்தைகளை தலையணையை வரிசையாக வைத்து மீது படுக்க வைக்கின்றனர். பின்னர் சாத்தான் வேடமிட்ட ஒரு நபர் இந்த குழந்தைகள் மீது தாவுகிறார். குழந்தைகள் மீது விழாமல், ஜாக்கிரதையாக!

இப்படி செய்தால் குழந்தைகளின் பாவங்கள் கழியும் என்பது ஐதீகமாக இருக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?