Dog (Representative) Newssense
உலகம்

குரைத்து தூக்கத்தை கலைத்த நாய்; உயிருடன் புதைத்த 82 வயது மூதாட்டி - அதிர்ச்சி சம்பவம்!

Antony Ajay R

பிரேசிலைச் சேர்ந்த 82 வயது பெண் பக்கத்து வீட்டு நாய் அதிகமாக குரைத்து தொல்லை செய்ததால் அதனை உயிருடன் புதைத்துள்ளார்.

நாயின் உரிமையாளரிடம் தனது தூக்கத்தை நாய் கெடுத்துவிட்டதனால் அதனை உயிருடன் புதைத்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

82 வயது மூதாட்டிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. புகைக்கப்பட்ட நாய் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

நாயின் உரிமையாளரான 33 வயது பெண் பக்கத்துவீட்டு மூதாட்டியின் நடவடிக்கையை அறிந்ததுமே அருகில் இருந்த நபர்களின் உதவியுடன் நாயை மீட்டுள்ளார்.

நினா என்ற அந்த நாய் இரண்டு மனிநேரம் வரை மண்ணில் புதைந்து இருந்ததாக கூறப்படுகிறது. அதனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல இன்னும் 30 நிமிடங்கள் ஆகியிருக்கிறது. ஆனாலும் நினா உயிர்பிழைத்துவிட்டது.

இந்த சம்பவத்துக்காக 82 வயது மூதாட்டி மன்னிப்புக் கேட்கவில்லை. மாறாக "இனி அந்த நாயை இங்கு வர விடாதே" என எச்சரித்துள்ளார்.

காவல்துறையினர் விசாரித்த போது, "அது மீண்டும் வந்தால், நான் மீண்டும் புதைத்துவிடுவேன்" என மிரட்டியிருக்கிறார்.

விலங்குகளிடம் வன்முறையாக நடந்துகொண்டதற்காக அந்த பெண்ணை கைது செய்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?