Covid19: ”இந்தியாவில் மீண்டும் கொரோனா அலை!" எச்சரிக்கும் சுகாதார துறை - ஊரடங்கு வருமா?

இதற்கு முன்பு பாதிப்புகள் ஏற்பட்டபோது, கிழக்கு ஆசியாவில் தொற்று ஏற்பட்டால், 30 முதல் 35 நாட்களுக்கு பிறகே இந்தியாவில் பாதிப்புகள் ஏற்பட்டன. சீனாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Covid19: ”ஜனவரியில் மீண்டும் கொரோனா அலை வரலாம்” எச்சரிக்கும் சுகாதார துறை- ஊரடங்கு வருமா?
Covid19: ”ஜனவரியில் மீண்டும் கொரோனா அலை வரலாம்” எச்சரிக்கும் சுகாதார துறை- ஊரடங்கு வருமா?canva

இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா தொற்று அலை ஏற்படும் வாய்ப்பிருப்பதாக மத்திய சுகாதர துறை எச்சரிக்கை அளித்துள்ளது.

சீனாவில் கொரோனா பரவல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. உருமாறிய BF.7 திரிபு வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு உயிரிழப்புகளும் அதிகமாகவே இருக்கிறது.

எனினும், வரும் ஜனவரி 8 முதல் கொரோனா கட்டுபாடுகள் கைவிடப்படும் எனவும், எல்லைகளை திறக்கப்போவதாகவும் சீன அரசு கடந்த திங்களன்று தெரிவித்தது.

மேலும், இனி கொரோனா பாதிப்புகள் குறித்தோ, மரணங்கள் குறித்தோ எந்த விதமான தகவல்களையும் அரசு வெளியிடாது எனவும் தெரிவித்துள்ளது.

இது உலக நாடுகளில் மீண்டும் ஒரு பெரிய பாதிப்பின் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Covid19: ”ஜனவரியில் மீண்டும் கொரோனா அலை வரலாம்” எச்சரிக்கும் சுகாதார துறை- ஊரடங்கு வருமா?
ஓமைக்ரான்: இந்தியாவில் நுழைந்த உருமாறிய BF.7 வைரஸ் - மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்குமா?
Covid 19
Covid 19Istock

ஜப்பான், அமெரிக்கா, பெல்ஜியம் உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்த வகை வைரஸ் பரவியுள்ள நிலையில், இந்தியாவிலும் சிலர் ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்தியாவில் மீண்டும் தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை, ஜனவரி 15க்கு மேல் இந்தியாவில் மீண்டும் ஒரு அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.

உயிரிழப்புகளும், பாதிப்பின் தீவிரமும் குறைவாகவே இருக்கும் என்றாலும் அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

Corona Test
Corona Test Twitter

இதனால் இந்திய அரசு சீனா மற்றும் இன்னும் 5 இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு RT-PCR நெகட்டிவ் சான்றிதழை அவசியமாக்கும் என டைம்ஸ் நவ் செய்தி தளத்தின் அறிக்கை கூறியுள்ளது.

மேலும், அந்த அறிக்கையின் படி, கடந்த இரண்டு நாட்களில் சுமார் 6000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், 39 சர்வதேச பயணிகளுக்கு தற்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Covid19: ”ஜனவரியில் மீண்டும் கொரோனா அலை வரலாம்” எச்சரிக்கும் சுகாதார துறை- ஊரடங்கு வருமா?
கோவிட் 19 : மீண்டும் காட்டுத் தீ போல பரவும் கொரோனா - என்ன நடக்கிறது சீனாவில்?

சுகாதாரத் துறை, இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுக்ளை இதற்கு முன்னர் ஏற்பட்ட பாதிப்பு முறையை கவனத்தில் கொண்டு செய்துள்ளது.

அதாவது, இதற்கு முன்பு பாதிப்புகள் ஏற்பட்டபோது, கிழக்கு ஆசியாவில் தொற்று ஏற்பட்டால், 30 முதல் 35 நாட்களுக்கு பிறகே இந்தியாவில் பாதிப்புகள் ஏற்பட்டன.

சீனாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால், சீனாவிலிருந்தும், பாதிப்புகள் கண்டறியப்பட்ட மற்ற ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்தும் வரும் பயணிகளுக்கு கட்டுபாடுகள், சோதனைகள் கடுமையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முகக்கவசம் கட்டாயமாக்கப்படாது எனவும் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்

Covid19: ”ஜனவரியில் மீண்டும் கொரோனா அலை வரலாம்” எச்சரிக்கும் சுகாதார துறை- ஊரடங்கு வருமா?
கோவிட்19 : அதி வேகமாக பரவும் புதிய வகை வைரஸ் BF.7 - அறிகுறிகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com