"உள்ளாடைகள் வாங்க டெல்லி சென்றேன்" ஜார்கண்ட் எம்.எல்.ஏ பதிலால் சர்ச்சை

தேசிய அளவில் பேசப்பட்டு வரும் இந்த பிரச்னைகள் குறித்து அந்த தொகுதியின் எம்.எல்.ஏ பொறுப்பற்ற முறையில் பதிலளித்திருப்பது அனைவரையும் கோபமடையச் செய்திருக்கிறது.
பசந்த் சோரன்
பசந்த் சோரன்Twitter

ஜார்கண்ட் மாநிலம் டும்கா தொகுதியின் எம்.எல்.ஏ பசந்த் சோரன். இவர் முதல்வர் ஹேமந்த் சோரனின் உடன்பிறந்தவர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவரது கண்ணியமில்லாத பேச்சுக்காக இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் சுமந்த்.

டும்கா தொகுதியில் கடந்த சில நாட்களில் நடந்த இரண்டு பெண்களின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய அளவில் பேசப்பட்டு வரும் இந்த பிரச்னைகள் குறித்து அந்த தொகுதியின் எம்.எல்.ஏ பொறுப்பற்ற முறையில் பதிலளித்திருப்பது நெட்டிசன்களை கோபமடையச் செய்திருக்கிறது.

இந்த கொலை சம்பவங்களுக்கு மத்தியில் டெல்லி சென்றார் எம்.எல்.ஏ பசந்த் சோரன். இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "நான் உள்ளாடைகள் வாங்குவதற்காக டெல்லி சென்றேன். வழக்கமாக நான் அங்கு தான் அவற்றை வாங்குவேன்" என்று கூறியிருக்கிறார் பசந்த்.

தொகுதியில் ஏற்படும் முக்கியப் பிரச்னைகளைக் கூட அசால்டாக எடுத்துக்கொண்டதற்காக சமூக வலைத்தளங்களில் தீவிரமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறார் பசந்த்.

"கடந்த 10 நாட்களில் இரண்டு பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் டும்கா எம்.எல்.ஏவும் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரருமான பசந்த் சோரன் இப்படி நடந்துகொள்கிறார்,

சட்டம் ஒழுங்கு பற்றி குற்றவாளிகள் எந்த பயமும் இல்லாமல் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை" என ட்விட்டர் பயனர் ஒருவர் கூறியுள்ளார்.

பசந்த் சோரன்
கன்னித்தன்மை சோதனையில் தோற்றதால் மணப்பெண்ணுக்கு ரூ.10 லட்சம் அபராதம் : என்ன நடந்தது?
பசந்த் சோரன்
சாவர்க்கர் அந்தமான் சிறை : நடுங்க வைக்கும் வதைக் கூடம் - எஃகு கோட்டையின் இருண்ட வரலாறு

கடந்த சில நாட்களுக்கு முன்பு டும்காவில் ஒரு 14 வயது பழங்குடி பெண் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் மற்றொரு 16 வயது பெண் ஒருவரால் எரிக்கப்பட்டார்.

நேற்று 17 வயது பழங்குடி இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது தற்கொலையா கொலையா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பசந்த் சோரன்
அதானி : வங்காள தேசம் பிரதமரை சந்தித்த இந்திய தொழிலதிபர் - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com