சௌம்யா சிங் ராத்தோர் : 3000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை எப்படித் தொடங்கினார்?

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வீடியோ கேமிங் பழக்கம் அதிகரித்ததால் இவர்களது நிறுவனமும் வளர்ந்தது. எம்.எஸ்.தோனி பிராண்ட் அம்பாஸிடரானார், ஐபிஎல் அணிக்கு ஸ்பான்சர் செய்தனர் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
சௌம்யா சிங் ராத்தோர் : 3000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை எப்படித் தொடங்கினார்?
சௌம்யா சிங் ராத்தோர் : 3000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை எப்படித் தொடங்கினார்?Twitter

உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் எப்போதாவது ஒரு பெண்ணின் பெயரைப் பார்த்திருக்கிறீர்களா? உலகிலேயே பணக்கார பெண் யார் எனத் தெரியுமா? பெண்கள் உலகம் முழுவதுமே முன்னேறத் தொடங்கியிருக்கும் சமூகமாகத்தான் இருக்கின்றனர்.

இந்தியாவில் இன்னும் மோசமான நிலையில் பெண்கள் இருக்கும் போது பெண் தொழில்முனைவோர்களின் கதைகள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளது. 

அப்படி பலரையும் ஊக்கப்படுத்தக்கூடிய கதைதான் சௌம்யா சிங் ரத்தோரின் கதை. பல ஆண்டுகள் கார்பரேட் வேலையில் இருந்த இவர் தனது நண்பருடன் இணைந்து புதிய நிறுவனத்தை தொடங்கிய 3 ஆண்டுகளில் அதனை 300 மில்லியன் மதிப்புடைய நிறுவனமாக உயர்த்தியும் இருக்கிறார்.

அடுத்த ஆண்டே இந்திய கிரிக்கெட்டின் முகமாக திகழும் ஒரு நட்சத்திரத்தை தங்களது பிராண்ட் அம்பாசிடராக நியமித்தனர்.

சௌம்யா வின்சோ என்ற நிறுவனத்தை 2018ம் ஆண்டு நண்பர் பவன் நந்தாவுடன் தொடங்கினார். சௌமியா தொடங்கிய முதல் நிறுவனம் இதுவேயாகும். பவன் ஏற்கெனவே சூ ரூம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியிருந்தார்.

இந்த இணை இந்தியாவின் வீடியோ கேம் சந்தையில் புயலை ஏற்படுத்தினர்.  இவர்களுக்கு பக்கபலமாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியும் இருக்க பெரிய பிராண்டாக வளர்ந்தது வின்சோ.

வின்சோவில் 100க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன. மொத்தமாக 12 மொழிகளில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. வின்சோ அதிகமாக மொழிப்பெயர்பாளர்கள், இன்ஃப்ளூயன்சர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியது.

வின்சோ மூலமாக இன்ஃப்ளூயன்சர்களுக்கு 75,000 முதல் 1,00,000 வரை வருமானம் கிடைத்தது. சிலருக்கு மாதம் 2-5 லட்சம் கூட வருமானம் கிடைத்தது.

 2022ம் ஆண்டு மொத்தமாக 1 லட்சம் இன்ஃப்ளூயன்சர்கள் இருந்த வின்சோவில் 2023ல் 2 லட்சம் இன்ஃப்ளூயன்சர்களாக மாற்ற திட்டமிட்டுள்ளனராம்.

சௌம்யா சிங் ராத்தோர் : 3000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை எப்படித் தொடங்கினார்?
RG சந்திர மோகன்: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர், 18000 கோடிக்கு அதிபதியானது எப்படி?

தொழில்முன்னேற்றங்களைக் கடந்து சௌம்யா ஒரு சைக்காலஜி படித்தவர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் பலகலைக்கழகத்தில் படித்துள்ளார். முதலில் பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து செட்டில் ஆனவர், டைம்ஸ் குரூப் ஆஃப் இந்தியாவிலும் பணியாற்றியுள்ளார். 

சூ ரூம்ஸ், சூஸ்டெல் நிறுவனங்களின் தொடக்ககால உறுப்பினராக இருந்துள்ளார்.  2018ம் ஆண்டும் பவன் மற்றும் சௌம்யா இணைந்து கேமிங் தளமான வின்சோ-வை உருவாக்கினர்.

சௌம்யா சிங் ராத்தோர் : 3000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை எப்படித் தொடங்கினார்?
பிரேம் குமார்: 12 வயதில் வேலைக்கு சென்ற சிறுவன் - சினிமா ஆசையால் கோடீஸ்வரரானது எப்படி?

கொரோனா பெருந்தொற்றும் வீடியோ கேம் விளையாடும் பழக்கத்தை அதிகரிக்க இவர்களது நிறுவனமும் தடையின்றி வளர்ந்தது.  2022ம் ஆண்டு தோனி கைக்கோர்த்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஸ்பான்ஸர்ஷிப் செய்தனர், புகழ்பெற்ற கேமிங் இன்ஃப்ளூயன்சர்களுடன் கைக்கோர்த்தனர்.

தொடர்ந்து வளர்ந்துவரும் வின்சோ மே 2023ல் 3000 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உருவாகியுள்ளது.

சௌம்யா சிங் ராத்தோர் : 3000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை எப்படித் தொடங்கினார்?
18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com