Football World Cup 2022: மெஸ்ஸியின் ஜெர்ஸி நிறத்தில் டீ கடையை அலங்கரித்த நபர்!

இளைஞர்கள் நேரடியாக வேலையிலிருந்து திரும்பி டீக் கடைக்கே வந்துவிடுகிறார்கள். ரசிகர்கள் இங்கு ஒன்றாகக் கூடி கால்பந்து குறித்து உரையாடுகின்றனர். அர்ஜென்டினா ரசிகர் மன்றமாகவே மாறிவிட்டது இந்த டீக்கடை.
Football World Cup 2022: மெஸ்ஸியின் ஜெர்ஸி நிறத்தில் டீ கடையை அலங்கரித்த நபர்!
Football World Cup 2022: மெஸ்ஸியின் ஜெர்ஸி நிறத்தில் டீ கடையை அலங்கரித்த நபர்!Twitter
Published on

கால்பந்து உலகக் கோப்பை தொடர் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் இதனைத் திருவிழாவாகக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டை விட அதிக அளவில் கால்பந்து ரசிகர்கள் இருக்கும் கேரளா மற்றும் மேற்கு வங்கம் முதலிய மாநிலங்கள் ரகளையாக களத்தில் இறங்கிவிட்டனர்.

கிரிக்கெட் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் இந்தியாவில் கால்பந்து ரசிகர்கள் தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள இது சிறந்த தருணமாக இருக்கிறது. அப்படி ஒரு ரசிகர் தனது வீடு, டீகடையுடன் கூடிய 3 மாடிக் கட்டிடத்தை அர்ஜென்டினா நாட்டின் கொடி நிறத்தில் வர்ணம் பூசி ரசிகத்துவத்தை காட்டியிருக்கிறார்.

மேற்கு வங்கம் மாநிலத்தின் இச்சாப்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹிப் ஷங்கர் பந்த்ரா. கால்பந்து வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகரான இவர் மெஸ்ஸியின் அணியான அர்ஜென்டினா அணியின் நிறத்தில் தனது டீக்கடையை அலங்கரித்துள்ளார். இது அந்த பகுதியின் புதிய அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Football World Cup 2022: மெஸ்ஸியின் ஜெர்ஸி நிறத்தில் டீ கடையை அலங்கரித்த நபர்!
FIFA உலக கோப்பை 2022: கால்பந்துதொடரை ஒன்றாக காண ரூ.23 லட்சத்திற்கு வீடு வாங்கிய ரசிகர்கள்!

அந்த பகுதியின் பல இடங்களில் அர்ஜென்டினா கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பந்த்ராவின் டீ கடையின் முன் பெரிய அளவில் கொடிகள் பறக்கின்றன. அவரது வீட்டைச் சுற்றி பல இடங்களில் மெஸ்ஸியின் உருவப்படம் வரையப்பட்டுள்ளது. போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

பந்த்ரா வீட்டின் உட்புறம் கூட அர்ஜென்டினா கொடியின் நிறத்தில் தான் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. இப்படியாக மேற்கு வங்கத்தில் சிறிய அர்ஜென்டினாவையே உருவாக்கி வைத்திருக்கிறார் அவர்.

Football World Cup 2022: மெஸ்ஸியின் ஜெர்ஸி நிறத்தில் டீ கடையை அலங்கரித்த நபர்!
மஹுவா மொய்த்ரா: சேலை அணிந்து கொண்டு கால்பந்து விளையாடிய எம்.பி - வைரலாகும் புகைப்படங்கள்

இளைஞர்கள் நேரடியாக வேலையிலிருந்து திரும்பி டீக் கடைக்கே வந்துவிடுகிறார்கள். ரசிகர்கள் இங்கு ஒன்றாகக் கூடி கால்பந்து குறித்து உரையாடுகின்றனர்.

பாந்த்ரா மெஸ்ஸிக்கு முன்னதாக மரடோனாவின் காலத்தில் இருந்தே அர்ஜென்டினா அணியின் ரசிகராக இருந்துள்ளார். 2011ம் ஆண்டு கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் ஆட்டத்தை நேரில் பார்த்தது முதல் அவரது தீவிர ரசிகராக மாறியிருக்கிறார். அப்போது தான் தனது வீட்டுக்கு அர்ஜென்டினா நிறம் பூசும் சிந்தனை அவருக்கு வந்துள்ளது.

பந்த்ரா மட்டுமல்லாமல் அவரது மகள் நேகா கூட தீவிர அர்ஜென்டினா ரசிகையாம். நேகாவின் கல்யாண உடைகூட அர்ஜென்டினாவின் நீல - வெள்ளை நிறத்தில் தான் வடிவமைக்கப்பட்டதாம்.

Football World Cup 2022: மெஸ்ஸியின் ஜெர்ஸி நிறத்தில் டீ கடையை அலங்கரித்த நபர்!
FIFA : இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை விதித்த ஃபிஃபா - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com