'சிரிக்கும் புத்தர்' இந்தியாவின் அணுகுண்டு வரலாறு தொடங்கிய நாள் - விரிவான தகவல்

1974-ஆம் ஆண்டு மே 18, இதே நாளில், அணு ஆயுத சோதனை நடத்திய உலகின் ஆறாவது நாடு என்ற மைல்கல்லை எட்டியது இந்தியா. அதே நாளில் தான் இந்தியாவில் “புத்த பூர்ணிமா” விழா கொண்டாடப்பட்டது, எனவேஅந்த அணு ஆயுத சோதனை ஆபரேஷனுக்கு “சிரிக்கும் புத்தர்” என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்திராகாந்தி
இந்திராகாந்திTwitter
Published on

48 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் என்னுமிடத்தில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி வரலாறு படைத்த நாள் இன்று.

1974-ஆம் ஆண்டு மே 18, இதே நாளில், அணு ஆயுத சோதனை நடத்திய உலகின் ஆறாவது நாடு என்ற மைல்கல்லை எட்டியது இந்தியா. அதே நாளில் தான் இந்தியாவில் “புத்த பூர்ணிமா” விழா கொண்டாடப்பட்டது, எனவேஅந்த அணு ஆயுத சோதனை ஆபரேஷனுக்கு “சிரிக்கும் புத்தர்” என்று பெயரிட்டிருக்கிறார்கள். பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) அப்போதைய இயக்குநர் ராஜா ராமண்ணாவின் மேற்பார்வையில் தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனை நடத்தப்பட்டது.

இந்த தெர்மோ நியூக்ளியர் அணு ஆயுத சோதனையின் வரம்பானது பொக்ரான் துப்பாக்கி பயிற்சி எல்லைக்குப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அது 8-12 டன்கள் கிலோ வரை எடை கொண்டது என PTI செய்தி நிறுவனம் கூறியது.

அணுகுண்டு வெடிப்பு (Representational)
அணுகுண்டு வெடிப்பு (Representational)Pixabay

“ஆபரேசன் ஸ்மைலிங் புத்தா” சர்வதேச நாடுகளின் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) உறுப்பினர்களான சீனா, ரஷ்யக் கூட்டமைப்பு, பிரான்ஸ், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தவிர அணு ஆயுத சோதனை நடத்திய முதல் நாடாக இந்தியா இருந்தது.

இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகு, டாக்டர் ராமண்ணா, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அழைத்து, “புத்தர் சிரித்தார்” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இந்திராகாந்தி
தாஜ்மஹால் : ஷாஜகான் மும்தாஜ் காதல் மற்றும் சோகத்தின் கதை - ஒரு வரலாற்று பயணம்

ஆபரேஷன் ஸ்மைலிங் புத்தா இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. ஏனெனில் அணுசக்தி சோதனை நடத்துவதற்கு முன்பு அமெரிக்கா மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் சிக்காமல் நடத்தி முடிக்கப்பட்டது.

ஆனால், இந்த சோதனைக்குப் பிறகு, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இந்தியா மீது சில கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. பொக்ரானில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனையானது, உலகில் அணுசக்தி பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதாகும்.

இந்திராகாந்தி
கிரண் பேடி முதல் அமிதாப் பச்சன் வரை : பிரபலங்கள் பகிர்ந்த போலிச் செய்திகள் | Fact Check

செப்டம்பர் 7, 1972 இல் தொடங்கப்பட்ட இந்த அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கைக்கு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, விஞ்ஞானிகளுக்கு துணையாக இருந்தார். அதற்குப் பிறகு, 1998-ல், மொத்தம் ஐந்து அணுசக்தி சோதனைகளை இந்தியா நடத்தியது. அதில் முதல் மூன்று மே 11 அன்று நடத்தப்பட்டது. மற்ற இரண்டு மே 13 அன்று நடத்தப்பட்டது.

இந்திராகாந்தி
கோடை விடுமுறைக்கு கோவா செல்ல திட்டமா? IRCTC -ன் இந்த திட்டத்தை முயற்சித்து பாருங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com